படைகள் எல்லாவற்றையும்; வேறு பெயராத வகை - வேறு இடங்களுக்குப் பெயர்ந்து செல்ல இயலாதபடி; வேரொடும் அடங்க நூறுவதே கருமம் - வேருடன் முழுவதையும் அழித்தொழிப்பதே நாம் செய்ய வேண்டிய செயலாகும்;என்பது நுவன்றான் - எனக் கூறினான். |
ஊறுபடை-பெருகி வரும் படை (நமக்கு இடையூறு செய்யும் படை என்பது பொருளாம்). நூறுதல் -அழித்தல். வேறு பெயராத வகை-எங்கும் தப்பித்துச் சென்று விடாதபடி. அடங்க -முழுவதும். ஏறுகடல்-பெரிய கடல். ஏறி-கடந்து சென்று. |
(56) |
கும்பகர்ணன் பேச்சுக்கு இராவணன் இசைதல் |
| 6127. | 'நன்று உரை செய்தாய் !-குமர-!-நான் அது |
| நினைந்தேன்; |
| ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம் |
| கொன்று பெயர்வோம்; நமர் கொடிப் படையை |
| எல்லாம், |
| "இன்று எழுக" என்க !' என இராவணன் |
| இசைத்தான். |
| |
குமர ! நன்று உரை செய்தாய் - (இராவணன் கும்பகர்ணனைப் பார்த்து) தம்பி ! நல்லதே சொன்னாய்; நான் அது நினைந்தேன் - நானும் அதைத்தான் நினைத்தேன்;ஒன்றும் இனி ஆய்தல் பழுது - இனி ஒன்றும் ஆராய்வது தீமையாகும்; ஒன்னலரைஎல்லாம் - நமது பகைவர்கள் எல்லோரையும்;கொன்று பெயர்வோம் - அடியோடு அழித்து மீள்வோம்;நமதுகொடிப் படையை எல்லாம் - நம் அரக்கர்களின் கொடிகளைத் தாங்கிய படையை எல்லாம்;இன்று எழுக என்க - இன்றே போருக்கு எழுக என ஆணை இடுவாயாக; என இராவணன் இசைத்தான் - என்று இராவணன் கூறினான்; |
நமர்-நம்மவர். எழுக என்க-போருக்கு எழுக எனக் கட்டளை இடுக என்பது பொருள். சிட்டர் செயல் செய்கிலை-குலச் சிறுமை செய்தாய் என்பன போன்ற கும்பகர்ணன் கூறிய உரைகளை விட்டுவிட்டு, "போருக்குப் புறப்படலாம்" நூறுவதுவேகருமம் என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு 'நன்றுரை செய்தாய்' என்ற இராவணனது பண்பைப் புலப்படுத்திய முறை நினைந்து போற்றத்தக்கது. |
(57) |