பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 43

ஈசன் - சிவபெருமான்.   ஏடு - இதழ்.  அவிழ்தல் - விரிதல் 
(மலர்தலுமாம்).
 

(59)
 

6130.

'முற்றும் முதலாய் உலகம் மூன்றும், எதிர் தோன்றிச் 

செற்ற முதலோரொடு செறுத்தது ஓர் திறத்தும், 

வெற்றி உனது ஆக விளையாதுஒழியின், என்னைப் 

பெற்றும் இலை; யான் நெறி பிறந்தும் இலென்'

என்றான்.

 

முற்றும்  முதலாய்  உலகம்   மூன்றும் -   எல்லாப்
பொருள்களும்  நிறைந்த மூன்றுலகத்தில் உள்ளவர்களும்;எதிர்
தோன்றி
- எனக்கு எதிரிலே போர்க்களத்திலே நின்று;செற்ற
முதலோ  ரொடு
- நமது பகைவர்களான தலைவர்களுக்குத்
துணையாகச் சேர்ந்து கொண்டு;செறுத்தது ஓர் திறத்தும் -
பகைத்துப் போரிட்ட போதும்;வெற்றி உனதாக - உனக்கே
வெற்றி  உரியதாக;  விளையாது  ஒழியின் - விளைவியாது
போவேனானால்; என்னைப் பெற்றும் இலை - நீ என்னை
உனக்கு மகனாகப்  பெறவுமில்லை; யான்  நெறி பிறந்தும்
இலென் என்றான்
-  நான்  உனக்கு  முறையாகப் பிறந்த
மகனுமல்லேன் என்றான்.
  

இந்திரசித்து இராவணனுக்குக் கூறிய வஞ்சினம்; இதனால்
போருக்குத் தன்னையே அனுப்புமாறு வேண்டினான் எனலாம்.
  

(60)
 

6131.

'குரங்கு பட, மேதினி குறைத்தலை நடப் போர் 

அரங்கு பட, மானுடர் அலந்தலை பட, பேர் 

இரங்கு படர் சீதை பட, இன்று இருவர் நின்றார் 

சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி-

சினத்தோய்!

 

சினத்தோய் - பகைவர் பால்  கோபம்  மிக்கவனே!  குரங்கு
பட
-  குரங்குப்   படை   அடியோடு   இறந்து   பட;மேதினி,
குறைத்தலை நட போர் அரங்குபட
-  தலையற்ற உடல் எங்கும்
நடனம் ஆடுவதால் உலகம் முழுவதும் போர்க்களம் அரங்கு போல்
காணப்பட;மானிடர்  அலந்தலை பட - அந்த மானிடர்கள் மனம்
கலங்கி நிற்க;பேர் இரங்கு படர் சீதைபட - சீதை பார்த்தவர்கள்
இரங்கும்  படி   துன்பப்பட; இன்று   இருவர்  நின்றார் - நம்
பகைவர்களாக நின்ற இருவரது; சிரம் குவடு எனக் கொணர்தல்
காணுதி
- தலைகளையும் மலை என நான்  கொண்டு வருவதைக்
காண்பாய்.