பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 45

'இனிது அன்றோ' குறிப்பு மொழியாக இகழத்தக்கது என்னும்
பொருள் தந்து நின்றது.
  

(63)
 

6134.

'நீரும், நிலனும், நெடிய காலும், நிமிர் வானும், 

பேர் உலகு யாவும், ஒரு நாள் புடைபெயர்த்தே, 

யாரும் ஒழியாமை, நரர் வானரரை எல்லாம், 

வேரும் ஒழியாதவகை வென்று அலது, மீளேன்.' 

 

நீரும்   நிலனும், நெடிய காலும், நிமிர் வானும் - நீரும்,
நிலமும்   நெடிது   வீசும்   காற்றும் நிமிர்ந்துயர்ந்த ஆகாயமும்
ஆகிய  பஞ்ச   பூதங்களுடனே;பேர்  உலகு யாவும் - மிகப்
பெரிதான உலகங்கள் யாவையும்;ஒரு நாள் புடைபெயர்த்தே -
ஒரே நாளில் நிலைமாற்றி; யாரும் ஒழியாமை -  எவரும் தப்பி
விடாதபடி;நரர்  வானரரை எல்லாம் - மனிதர்கள் குரங்குகள்
எல்லாவற்றையும்;வேரும் ஒழியாத வகை - வேரும் கூட தப்பி
விடாதபடி;வென்று அலது மீளேன் - வென்று அல்லது மீண்டு
வரமாட்டேன்;
 

நிமிர்தல்-உயர்தல். வேருடன்-அடியோடு.
 

(64)
 

வீடணன் இந்திர சித்தைக் கடிந்து கூறுதல்
 

6135.

என்று, அடி இறைஞ்சினன் எழுந்து, 'விடை ஈமோ, 

வன் திறலினாய்!' எனலும், வாள் எயிறு வாயில் 

தின்றனன் முனிந்து, நனி தீவினையை எல்லாம் 

வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும். 

 

என்று   அடி   இறைஞ்சினன்  - என்று கூறி இராவணனது
பாதங்களில் வீழ்ந்து   வணங்கிப்பின்; எழுந்து -   எழுந்து நின்று;
(இராவணனைப் பார்த்து)வன்திறலினாய்- மிக்க வலிமை  உடைய
எந்தையே!விடை ஈமோ - எனக்கு விடை தருக; எனலும் -  என
இந்திரசித்து கூறி நிற்க; நனி  தீவினையை  எல்லாம் -  மிகுந்த
தீவினைகள் அனைத்தையும்; வென்றவரின் நன்றுணரும் - தங்கள்
தவ பலத்தாலே வென்ற முனிவர்களைவிடவும் நன்மையை உணர்ந்த;
வீடணன்
- வீடணன்  என்னும்  பெயருடையவனான இராவணனது
தம்பி;வாள் எயிறு  வாயில்  தின்றனன் - பற்களால் உதட்டைக்
கடித்தவனாக;முனிந்து  - இந்திர சித்தைக் கோபித்து;விளம்பும் -
பின்வருமாறு கூறலானான்;