பக்கம் எண் :

46யுத்த காண்டம் 

இறைஞ்சினன்,    நின்றனன்     இவை     முற்றெச்சங்கள்.
வன்திறம் - மிக்க வலிமை வாள் எயிறு - வெண்மையான பற்கள்.
தவத்தாலும் ஞானத்தாலும் தீவினைகளை   வென்றுயர்ந்தவராகிய
மேலோரினும் மெய்யுணர்வு  படைத்தவன்   வீடணன் என்பதை
"நனி தீ வினையை எல்லாம் வென்றவரின் நன்றுணரும் வீடணன்"
என்றார்.
 

(65)
 

6136.

'நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை 

போலுமால்!-உறு பொருள் புகலும் பூட்சியோய்! 

காலம், மேல் விளை பொருள், உணரும் கற்பு இலாப் 

பால!-நீ இனையன பகரற்பாலையோ? 

 

காலம் மேல் விளை பொருள் உணரும் -  காலத்தையும்
பின்னால் நிகழும் காரியத்தையும் உணர்கின்ற;கற்பு இலா பால!
- அறிவற்ற சிறுவனே; நூலினால் - பல   நூல்களையும்  கற்ற
நூலறிவினாலும்;நுணங்கிய அறிவு - நுணங்கிய அறிவாற்றலும்;
நோக்கினை போலும்- எதிர்காலத்தை நோக்கும் திறமுடையாய்
போலும்; உறுபொருள்   புகலும்   பூட்சி   யோய் - நேர
இருப்பதைக்  கூறும் மனஉறுதியுடன் பேசுகிறாய்;  நீ இனையன
பகர்தற் பாலையோ
-   நீ   இத்தகையவைகளைப்   பேசுதல்
தகுமோ?
   

கற்பு-கற்றலினால் பெறும்  அறிவு (கல்வியுமாம்)  நூல்-நூலறிவு.
நுணங்கிய-நுட்பமான. பூட்சி-மன உறுதி.
 

(66)
 

6137.

'கருத்து இலான், கண் இலான், ஒருத்தன்

கைக்கொடு

திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்; 

விருத்த மேதகையவர், வினைஞர், மந்திரத்து 

இருத்தியோ?-இளமையால் முறைமை எண்ணலாய்!

 

இளமையால்   முறைமை  எண்ணலாய் -  இளமைப்பருவம்
காரணமாக, அரசியல் முறையை எண்ணிப் பார்க்காதவனே! கருத்து
இலான்
-  ஓவிய ஞானமில்லாதவனும்; கண் இலான் ஒருத்தன்-
கண்  பார்வை இல்லாதவனுமான ஒருவன்; சித்திரம் கைக்கொடு-
ஓவியம் ஒன்றைக்  கையிலே   எடுத்துக்   கொண்டு;திருத்துவான்
அனைய 
- இதனை நன்கு திருத்தி அமைப்பேன் என்பது போல்;
செப்புவாய்  - நீ பேசுகிறாய்; விருத்த  மேதகையவர் - வயது
முதிர்ந்த மேலான அறிஞரும்;வினைஞர் - சிறந்த