பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 47

வினையம்   உடையவர்களும்   இருக்கத்   தகுந்த;   மந்திரத்து
இருத்தியோ
- மந்திராலோசனை சபையில் நீ இருக்கத் தகுமோ?
 

(67)
 

6138.

'தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர் 

ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம் 

தீயவர், அறத்தினால் தேவர் ஆயது 

மாயமோ? வஞ்சமோ? வன்மையேகொலோ? 

 

தூயவர்   -   தூய்மை    உடையவர்களும்;   முறைமையே
தொடங்கும் தொன்மையோர்
- முறையான நல்ல செயல்களையே
செய்யும் முன்னோரும்;  ஆயவர்  நிற்க  -   ஆகிய அவர்கள்
(தேவராகிய)   நிற்க   மற்று  அவுணர்  ஆதியாம் தீயவர் -
அசுரர்கள் முதலான  தீயவர்களும்; அறத்தினால் - தாம் செய்த
அறச்செயல்களால்; தேவராயது  மாயமேர்   - தேவர்களானது
மாயத்தாலோ;   வஞ்சமோ -   அல்லது   வஞ்சனையாலோ?
வன்மையே கொலோ - தமது வலிமையினாலோ?
 

தூயவர் - உள்ளம்.  உரை, செயல் மூன்றிலும்  தூயவர்கள்,
மற்று-வினை மாற்றுப் பொருள் தந்தது.
 

(68)
 

6139.

'அறம் துறந்து, அமரரை வென்ற ஆண்தொழில்- 

திறம் தெரிந்திடின், அதுதானும் செய் தவம் 

நிறம் திறம்பாவகை இயற்றும் நீதியால், 

மறம் துறந்து, அவர் தரும் வரத்தின் வன்மையால். 

 

அறம் துறந்து - நீ அறத்தை விட்டு விலகி;அமரரை வென்ற
- தேவர்களை வென்ற;ஆண் தொழில் திறம் - வீரத்  தொழிலின்
திறத்தை;  தெரிந்திடின் - ஆராய்ந்து பார்த்தால்;  அதுதானும் -
அதுவும் கூட;செய்தவம் நிறம்  திறம்பாவகை  - சிறந்த தவத்தை
பெருமை மாறாத வகையிலே;  இயற்றும் நீதியால்- செய்து முடித்த
தன்மையால்;மறம் துறந்து -   கொடுமைக்குணம் விடுத்து; அவர்
தரும் வரத்தின் வன்மையால்
- அந்தத் தேவர்கள் தந்த வரத்தின்
வலிமையினாலாம். 
 

ஆண்தொழில்-வீரச்செயல். திறம்புதல்-கெடுதல்.
 

(69)