பிள்ளைமை விளம்பினை - சிறுபிள்ளைத்தனமாகப் பேசினாய்: பேதை நீ - நீ அறிவில்லாதவனாயினை; என ஒள்ளிய புதல்வனை உரப்பி - என்று, வலிமை மிக்க மகனான இந்திரசித்தை அதட்டி விட்டு; என் உரை எள்ளலை ஆம் எனின் - எனது சொற்களை ஏளனம் செய்யாது கேட்பாயாயின்; தெள்ளிய பொருள் - (நாம் கடைப்பிடிக்கக் கூடிய) தெளிவான கருத்துக்களை; இயம்பல் ஆற்றுவென் - சொல்லத் தொடங்குவேன்; என அரசன் செப்பினான் - என்று, அரசனாகிய இராவணனை நோக்கிக் கூறலானான். |
அரசன்-இராவணன். |
(72) |
வீடணன் அறவுரை |
| 6143. | 'எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ |
| வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ; |
| "இந்திரப் பெரும் பதம் இழக்கிறாய்' என |
| நொந்தனென் ஆதலின், நுவல்வது ஆயினேன். |
| |
எந்தை நீ - எனக்குத் தந்தையும் நீயே; யாயும் நீ - தாயும் நீயே; எம் முன்நீ - எனக்கு மூத்த தமையனும் நீயே; தவ வந்தனைத் தெய்வம் நீ - தவத்தால் நான் வந்தித்து வணங்குதற்குரிய தெய்வமும் நீயே;மற்றும் முற்றும் நீ - வேறு எல்லாம் நீயே;இந்திரப் பெரும் பதம் - இந்திர பதவிக்கு நிகரான பெரிய அரசபதவியை;இழக்கின்றாய் என - இழக்கப் போகிறாயே என்று; நொந்தனென் ஆதலின் - மனம் வருந்தினேன் ஆதலால்; நுவல்வது ஆயினேன் - இவை சொல்லலானேன். |
எந்தை - எம் தந்தை. யாய் - தாய். எம்முன் - என்தமையன். இழக்கின்றாய் என்றது இழப்பாய் என்னும் பொருளில் வந்தது. உறுதி குறித்த காலவழுவமைதி. |
(73) |
| 6144. | 'கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும், |
| உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும், |
| சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும், |
| முற்றுறக் கேட்ட பின், முனிதி-மொய்ம்பினோய்! |
| |
கற்று உறுமாட்சி - நல்ல நூல்களைக் கற்று அறிந்த மாண்பு; என் கண் இன்று ஆயினும் - என்னிடம் இல்லை என்றாலும்; உற்று |