உறு பொருள்- ஆராய்ந்து மேலான பொருளை; தெரிந்து உணர்தல் ஓயினும் - தெரிந்துணர்ந்து கொள்ளுதல் இல்லையென்றாலும்; சொற்றுறு சூழ்ச்சியின் - சிறப்பித்துப் பேசப்படும் ஆராய்ச்சியின்; துணிவு சோரினும் - முடிவு தவறுமாயினும்; மொய்ம்பினோய் - வலிமை மிக்கவனே; முற்றுறக் கேட்டபின் முனிதி - என்னைக் கோபிப்பதானாலுமே நான் கூறுவன யாவும் கேட்டபின் கோபி. |
சோர்தல் - தவறுதல். ஓய்தல் - விடுபடுதல் (இல்லையாதல்). |
(74) |
| 6145. | 'கோநகர் முழுவதும், நினது கொற்றமும், |
| சானகி எனும் பெயர் உலகின் தம்மனை |
| ஆனவள் கற்பினால், வெந்தது அல்லது, "ஓர் |
| வானரம் சுட்டது" என்று உணர்தல் மாட்சியோ? |
|
கோநகர் முழுவதும் - நமது தலைநகரமாகிய இலங்கை நகர் முழுவதும்;நினது கொற்றமும் - உன்னுடைய வீர வெற்றியும்; சானகி எனும் பெயர் - சானகி என்ற பெயர் கொண்ட; உலகின் தம் அனை - உலகத்தின் தாயாகிய;ஆனவள் கற்பினால் - அந்தத்தேவியின் கற்பினனலால்; வெந்தது அல்லது - வெந்து ஒழிந்ததே அல்லாமல்; ஓர் வானரம் சுட்டது - ஒரு குரங்கு வந்து சுட்டது; என்று உணர்தல் மாட்சியோ- என்று நினைப்பது அறிவுடைமை ஆகுமோ? |
கோநகர் - தலைநகரம். தம்மனை - தாய். |
(75) |
| 6146. | 'எண்பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால், |
| விண்பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும், |
| பெண்பொருட்டு அன்றியும், பிறிது உண்டாம்எனின், |
| மண்பொருட்டு அன்றியும், வரவும் வல்லவோ?* |
|
எவரும் எண் பொருட்டு ஒன்றி நின்று - யாரும் எண்ணும் பொருட்டாக மனம் ஒன்றி நின்று;எண்ணினால் - சிந்தித்தால், விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும் - வானளாவ வளர்ந்த உயர்வும் தாழ்வும்; பெண் பொருட்டு - பெண் காரணமாகவோ;அன்றியும் பிறிது உண்டாம் எனின் - அல்லது வேறு ஒரு காரணம் உண்டு என்றால்; மண் பொருட்டு - மண் காரணமாக உண்டாகும்; அன்றியும் வரவும் வல்லவோ - இவையல்லாது வேறு காரணத்தால் வரலாகுமோ? |