பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 51

எண் - ஆய்வு.  வல்லவோ -  வல்லவையோ. ஒன்றிநின்று -
ஒருமைப்பாட்டுன் நின்று. மீட்சி-தாழ்வு.
  

(76)
 

6147.

' "மீனுடை நெடுங் கடல் இலங்கை வேந்தன்முன் 

தானுடை நெடுந் தவம் தளர்ந்து சாய்வது, ஓர் 

மானுட மடந்தையால்" என்னும் வாய்மொழி- 

தேனுடை அலங்கலாய்!-இன்று தீர்ந்ததோ? 

 

தேனுடை  அலங்கலாய் - தேன் சிந்தும் மாலையை  அணிந்த
மன்னனே!   மீனுடை   நெடுங்கடல்  -  மீன்  நிறைந்த  பெரிய
கடலால் சூழப்பட்ட;இலங்கை வேந்தன் - இலங்கைக்கு அரசனான
இராவணன்;முன் தான் உடை நெடுந்தவம் - முன் தனக்குண்டான
தவபலம்;தளர்ந்து  சாய்வது -  தளர்ந்து  கெடுவது; ஓர் மானுட
மடந்தையால்
- ஒரு மானிடப் பெண்ணால்;என்னும் வாய் மொழி
- என்ற  தவறாத  சாப மொழி;இன்று தீர்ந்ததோ - இன்று நீங்கி
விட்டதோ? இல்லையே!
  

அலங்கல் - மாலை. வாய்மொழி - உண்மையான மொழி. இங்கே
சாபத்தைக் குறித்தது.
  

(77)
 

6148.

'ஏறிய நெடுந் தவம் இழைத்த எல்லை நாள், 

ஆறிய பெருங் குணத்து அறிவன் ஆணையால், 

கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை; 

வேறு இனி அவர்வயின் வென்றி யாவதோ? 

 

ஏறிய நெடுந்தவம் - நீ உயர்ந்த பெரிய  தவத்தை;   இழைத்த
எல்லை  நாள் 
-  செய்த   காலமாகிய   அந்த    நாள்;  ஆறிய
பெருங்குணத்து   அறிவன் 
-  அமைதியான  சிறந்த  குணத்தை
உடைய   பிரம  தேவன்;ஆணையால் - கட்டளையினால்;  கூறிய
மனிதர்பால்   
-    கூறப்பட்ட     மனிதர்களிடம்;    கொற்றம்
கொள்ளலை
- வெற்றிக்கு  வரம்   கேட்டுப்பெற  வில்லை;  வேறு
இனி   அவர்  வயின்
- இனி  அந்த  மானிடர்கள் பால்;வென்றி
ஆவதோ
- வெற்றியடைய முடியுமோ?
  

ஆறிய - ஆன்றவிந்தடங்கிய. அறிவன் - கடவுளாகிய பிரமன்.
  

(78)
 

6149.

'ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ? 

நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்;