பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 53

தோற்றது. அச்சாபத்தை நிறைவேற்றிவிட்டது என்பதை நினைவுபடுத்தி
வீடணன் இராவணனைத் தெருட்டுகிறான்.
  

(80)
 

6151.

'தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள் 

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ? 

"நோய் உனக்கு யான்" என நுவன்றுளாள் அவள்; 

ஆயவள் சீதை, பண்டு அமுதின் தோன்றினாள். 

  

தீயிடைக்  குளித்த  -   நெருப்பிலே    மூழ்கி   உயிர்துறந்த;
அத்தெய்வக் கற்பினாள் - அந்த  தெய்வீகக்  கற்புடைய வேதவதி;
வாயிடை  மொழிந்த  சொல் 
-  வாயால்  கூறிய  சாபமொழிகள்;
மறுக்க  வல்லமோ
- மறுக்கும் வல்லமை  உடையேமோ?  உனக்கு
நான்  நோய்
- 'நான் உனக்கு நோயாவேன்';என நுவன்றுளாள் -
என்று   கூறியுள்ளாள்;  அவள்  ஆயவள்  சீதை  - அவளேதான்
சீதை;  பண்டு  அமுதில் தோன்றினாள்  -  முன்பு   பாற்கடலில்
அமுதுடன் அவதரித்த இலக்குமியும் அவளே.
  

தவவாழ்வை  மேற்கொண்டு,   தனித்து   வாழ்ந்த  வேதவதியை
இராவணன்   திக்கு   விஜயத்தின்     போது   பலாத்காரம் செய்ய,
'நான்   உனக்கு   நோயாவேன்'  என்று கூறி யாகத் தீயில் விழுந்து
உயிர் துறந்தாள். அந்த வேதவதியே   சீதை;  திருமகளின் அவதாரம்.
இந்த வரலாறு உத்தர காண்டத்தில் பேசப்படும்.
 

(81)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம
  

6152.

சம்பரப் பெயருடைத் தானவர்க்கு 

இறைவனைத் தனு வலத்தால், 

அம்பரத்து உம்பர் புக்கு, அமரிடைத் 

தலை துமித்து, அமரர் உய்ய, 

உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து 

உதவினான்-ஒருவன், நேமி 

இம்பரில் பணி செய, தசரதப் 

பெயரினான், இசை வளர்த்தான்; 

 

தசரதப் பெயரினான் ஒருவன் - தயரதன் என்னும் பெயருடைய
ஒரு  மன்னன்;  நேமி  இம்பரில்  பணி செய  -  தனது ஆணை
இவ்வுலகம் முழுதும் ஆட்சி புரியும் படியாக; சம்பரப் பெயருடை -
சம்பராசுரன்  என்ற  பெயர்  உடைய;  தானவர்க்கு இறைவனை -
அசுரர் குலத்து அரசனை;தனு வலத்தால் - தனது