வில்லின் வலிமையால்;அம்பரத்து உம்பர் புக்கு - விண்வழியே வானுலகு சென்று; அமரிடைத் தலை துமித்து - தேவர்களைத் துன்புறுத்திய அவ்வரக்கனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்து; அமரர் உய்ய - தேவர்கள் உய்யுமாறு; உம்பருக்கு இறைவனுக்கு - தேவர்களுக்கு மன்னனான இந்திரனுக்கு; அரசு அளித்து - (சம்பரனிடமிருந்து மீட்ட விண்ணுலகத்தின்) ஆட்சியைத் தந்து; உதவினான் - தேவர்களுக்கு உதவி செய்தான்;இசை வளர்த்தான் - அதனால் பெரும் புகழ் பெற்றான். |
அம்பரம் -விண். துமித்து -துண்டித்து. நேமி -ஆணை. இந்தச் செய்தி கையடைப் படலம் 9ம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது காண்க. ஐந்து சீராகப்பிரித்துக் கலித்துறையாகவும் இது முதலாக 6168 ஆம் பாடல் வரையுள்ளவற்றைக் கொள்ளவும் கூடும். |
(82) |
| 6153. | 'மிடல் படைத்து, ஒருவனாய், அமரர் கோன் |
| விடையதா வெரிநின் மேலாய், |
| உடல் படைத்து அவுணர் ஆயினர |
| எலாம் மடிய, வாள் உருவினானும், |
| அடல் படைத்து, அவனியை, |
| "பெரு வளம் தருக !" என்று அருளினானும், |
| கடல் படைத்தவரொடும், கங்கை |
| தந்தவன் வழிக் கடவுள் மன்னன், |
| |
மிடல் படைத்து - (அந்தத் தயரதன்) மிகுந்த வலிமை கொண்டு;ஒருவனாய் - தனக்கெவரும் ஒப்பில்லாத ஒருவனாகவே; அமரர் கோன் விடையதா - தேவேந்திரனே காளையாக; வெரி நின் மேலாய் - அக்காளையின் முதுகின் மேல் அமர்ந்து; உடல் படைத்து - மாறுபாடு கொண்டு (அரக்கருடன் பகை கொண்டு);அவுணர் ஆயினர் எலாம் மடிய - அரக்கர்களான எல்லோரும் செத்தொழிய; வாள் உருவினானும் - வாளை உருவிப் போரிட்டவனான ககுத்தனும்; அவனியை அடல் படைத்து - உலகத்தை எல்லாம் வென்று;பெருவளம் தருக - நிறை வளம் தருக; என்று அருளினானும் - என்று கூறி உலகமக்களுக்கு அருள் செய்து உதவிய பிருதுவும்;கடல் படைத்தவரொடும் - கடலை உண்டாக்கிய சகரர்களுடனே; கங்கை தந்தவன் - கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டு வந்த பகீரதனும்; வழிக் கடவுள் மன்னன் - தோன்றிய குலத்திலே பிறந்த தெய்வத்தன்மை உடைய மன்னனாவான். |