மிடல் - வலிமை. அமரர்கோன் -தேவேந்திரன். விடை-காளை. வெரிந்-முதுகு. உடல்-மாறுபாடு. அவுணர் மடிய வாள் உருவியவன் ககுத்தன்; அவனியை வளம் தரச் செய்தவன் பிருது. கடல் படைத்தவர் சகரர்; கங்கையைக் கொணர்ந்தவன் பகீரதன். இவர்களெல்லாம் பிறந்த சூரியகுலத்தில் பிறந்தவன்தான் தசரதன். தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்றால், மானிடர்களைக் குறைவாக மதிப்பிடலாமோ என்று எடுத்துக் கூறினான். |
(83) |
| 6154. | 'பொய் உரைத்து உலகினில் சினவினார் |
| குலம் அறப் பொருது, தன் வேல் |
| நெய் உரைத்து, உறையில் இட்டு, |
| அறம் வளர்த்து, ஒருவனாய் நெறியில் நின்றான், |
| மை உரைத்து உலவு கண் மனைவிபால் |
| வரம் அளித்து, அவை மறாதே, |
| மெய் உரைத்து, உயிர் கொடுத்து, |
| அமரரும் பெறுகிலா வீடு பெற்றான். |
| |
பொய் உரைத்து - பொய் கூறி வாழ்ந்தும்; உலகினில் சினவினார் குலம் - உலகிலே சினந்து எழுந்து தீமை செய்பவரும் ஆகிய அரக்ககுலத்தினர்; அறப்பொருது - அடியோடு அழியும்படி போர் செய்து; தன் வேல் நெய் உரைத்து - தனது வேலுக்கு நெய் பூசி; உறையில் இட்டு - உறையில் இட்டு வைத்து; அறம் வளர்த்து - அறநெறிகளை விரும்பி வளர்த்து; ஒருவனாய் நெறியில் நின்றான் - ஒப்பற்றவனாய் ஒழுக்க நெறியிலே நிலைத்து நின்றவன்; மை உரைத்து உலவு கண் - மை பூசப்பட்ட அசைகின்ற கண்ணை உடைய; மனைவி பால்வரம் அளித்து - மனைவியான கைகேயிக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து; அவை மறாது மெய் உரைத்து - அவற்றை மறுக்காமல் உண்மையை உரைத்து; உயிர் கொடுத்து - உயிரையும் தந்து; அமரரும் பெறுகிலா - தேவர்களும் அடைய இயலாத; வீடு பெற்றான் - பேரின்ப வீடான பரமபதத்தை அடைந்தான் (அந்தத் தயரதனாவான்). |
'உரைத்து' என்பது 'பொய் உரைத்து' எனப் பேசி என்ற பொருளிலும் 'நெய் உரைத்து' என்பதில் பூசி என்ற பொருளிலும் 'மை உரைத்து' என்பதில் தீட்டி என்ற பொருளிலும் வந்தது. சினவுதல் - சினந்தெழுதல். பொய் உரைத்தலும், சினந்தெழுதலும் அரக்கருக்குரிய தாதலின் 'குலம்' என்பதற்கு அரக்க குலம் என்று |