பக்கம் எண் :

56யுத்த காண்டம் 

பொருள்  கொள்ளப்பட்டது.  பிறழும் தன்மை உடைய கண்களை
'உலவு கண்' என்றார்.
 

(84)
 

6155.

'அனையவன் சிறுவர், எம் பெரும! 

உன் பகைஞரானவரை அம்மா 

இனையர் என்று உணர்தியேல், 

இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்; 

முனைவரும் அமரரும், முழுது 

உணர்ந்தவர்களும், முற்றும் மற்றும், 

நினைவு அருந் தகையர்; நம் வினையினால் 

மனிதர் ஆய், எளிது நின்றார். 

 

எம்பெரும -  எங்கள் தலைவனே!அனையவன் சிறுவர்-
அத்தகைய தயரதனது புதல்வர்கள்; உன் பகைஞர் ஆனவரை-
உனக்கு  பகைஞர்  ஆயினர்   அவர்களை;  இனையர் என்று
உணர்தியேல்
- இத்தன்மை  உடையவர்கள்  என்பதை அறிய
விரும்புவையேல்;  இருவரும்   ஒருவரும்   எதிரிலாதார் -
இராமன்,     இலக்குவன்    ஆகிய     இருவரும்   ஒப்பாக
எவருமில்லாதவர்;  முனைவரும் அமரரும் -   முனிவர்களும்
தேவர்களும்;  முழுதுணர்ந்தவர்களும் -  முழுதும் உணர்ந்த
ஞானிகளும்;முற்றும்   மற்றும் -   மற்றுமுள்ள    உயிர்கள்
எல்லாமும்; நினைவு அரும் தகையர் -  நினைக்கவும் அரிய
தன்மையர்;  நம்   வினையினால் மனிதராய் - நாம் செய்த
தீவினையால் மனிதர்களாகி; எளிது நின்றார் - எளிதில் காண
வந்து நின்றார்கள்.
  

வீடணன் இராவணனிடம் கொண்ட பெருமதிப்பால் அவரை
'எம்பெரும' என அழைத்தான். தசரத புத்திரர்களை இத்தகையர்
என   உணர்தல்   அரிது    என்பதனால்   "அம்மா"   என
வியந்துரைத்தான்.   'ஒருவரும்      எதிரிலாதார்'   ஒப்பாரும்
மிக்காருமில்லாதவர் என்பது கருத்து.
 

(85)
 

6156.

'கோசிகப் பெயருடைக் குல முனித் தலைவன், 

"அக் குளிர் மலர்ப் பேர் 

ஆசனத்தவனொடு எவ் உலகமும் 

தருவென்" என்று அமையலுற்றான், 

ஈசனின் பெறு படைக்கலம், 

இமைப்பு அளவில் எவ் உலகில் யாவும்