| நாசம் உற்றிட நடப்பன, |
| கொடுத்தன பிடித்துடையர்-நம்ப! |
| |
நம்ப - விருப்பத்துக்குரியவனே! அக்குளிர் மலர்ப்பேராசனத்தவனொடு - அந்தக் குளிர்ந்த தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனோடு;எவ்வுலகமும் தருவென்- எல்லா உலகங்களையும் படைப்பேன்;என்று அமையலுற்றான் கோசிதப் பெயருடைக் குலமுனித்தலைவன் - என்று தொடங்கியவனாய கோசிகன் என்ற பெயருடைய முனிவர் தலைவன் விசுவாமித்திரன்; ஈசனின் பெறு படைக்கலம்- சிவபிரானிடம் பெற்ற ஆயுதங்கள்; இமைப்பளவில் - கண்ணிமைக்கும் நேரத்தில்; எவ்வுலகில் யாவும் - எவ்வுலகிலும் வாழும் எல்லாவற்றையும்; நாசம் உற்றிட நடப்பன - நாசம் செய்யும்படி செல்வனவும்; கொடுத்தன - கொடுத்தனவும் ஆகியவற்றை; பிடித்துடையர் - கைக்கொண்டுள்ளனர். |
பிரமதேவன் போலவே எல்லா உலகங்களையும் எனது தவபலத்தால் இப்போதே படைப்பேன்' எனத் தொடங்கிய ஆற்றலுள்ளவர் விசுவாமித்திரர். நம்பன் - விரும்பத்தக்கவன். கோசிகன் -விசுவாமித்திரனின் மற்றொரு பெயர். விசுவாமித்திரர் திரிசங்கு மன்னனுக்காக எல்லா உலகங்களையும் படைக்கத் தொடங்கியது. இராம இலக்குவர்களுக்கு ஆயுதம் வழங்கியது ஆகிய செய்திகள் பாலகாண்டத்துள் கூறப்பட்டுள்ளன. |
(86) |
| 6157. | 'எறும் வலிப் பொரு இல் தோள் அவுணரோடு |
| அமரர், பண்டு, இகல் செய் காலத்து, |
| உறு திறல் கலுழன்மேல் ஒருவன் நின்று |
| அமர் செய்தானுடைய வில்லும், |
| தெறு சினத்தவர்கள் முப்புரம் |
| நெருப்புற உருத்து எய்த அம்பும், |
| குறுமுனிப் பெயரினான், நிறை தவர்க்கு |
| இறை, தரக் கொண்டு நின்றார். |
| |
எறுழ் வலிப் பொருவில் தோள் - மிகுந்த வலிமை உடைய நிரற்ற தோளாற்றலும் உள்ள; அவுணரோடு - அசுரர்களுடன்; அமரர் பண்டு இகல் செய்காலத்து - முன்பு தேவர்கள் போர் செய்த காலத்திலே; உறுதிறல் கலுழன் மேல் - மிக்க வலிமை உடைய கருடன் மேல் அமர்ந்து; ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் - ஒருவனாக எதிர்த்து நின்று போர் செய்த திருமாலின் |