பக்கம் எண் :

58யுத்த காண்டம் 

வில்லும்;  தெறு   சினத்தவர்கள்  -   எவரையும்   அழிக்கும்
வன்மையும்   சினமும்   உடைய  அரக்கர்கள் வாழும்; முப்புரம்
நெருப்பு உருத்து எய்த அம்பும்
- திரிபுரம்  தீப்பற்றி  அழிய,
சிவபெருமான் சினந்தெய்த அம்பும்; குறுமுனிப்  பெயரினான் -
அகத்தியர்  என்ற பெயர் கொண்ட முனிவரும்;  நிறை தவர்க்கு
இறை தர
- நிறைந்த தவத்தை உடைய  முனிவர்களுக்கெல்லாம்
தலைவருமானவர் தர;கொண்டு நின்றார் - அவற்றைப் பெற்றுக்
கொண்ட சிறப்புடையவர்கள்.
  

எறுழ்வலி-மிக்க வலிமை. கலுழன்-கருடன். குறுமுனி-அகத்தியர்.
அகத்தியர்   இராமனுக்கு   வில்லும்    அம்பும் கொடுத்த செய்தி,
ஆரண்ய காண்டம் அகத்தியப் படலத்துள் கூறப்பட்டுள்ளது.
 

(87)
 

6158.

'நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு 

அளவிடற்கு உரிய; நாளும், 

மேவு தீ விடம் உயிர்ப்பன; வெயில் 

பொழி எயிற்றன; அவ் வீரர் 

ஆவம்ஆம் அரிய புற்று உறைவ;- 

முற்று அறிவருக்கு அழிவு செய்யும் 

பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது, 

இரை பெறா-பகழி நாகம். 

 

பகழிநாகம் -   இராமனிடமுள்ள   அம்புகளாகிய  நாகங்கள்;
நாவினால் உலகை நக்கிடுவ - நாவால் உலகை எல்லாம் நக்கும்
திறனுடையன;திக்கு அளவிடற்குரிய - திசைகளை அளவிடுவதற்கு
உரியன;   நாளும் மேவு  தீவிடம்  உயிர்ப்பன - நாள்தோறும்
பொருந்திய   தீய   விஷத்தை  வெளிவிடுவன;  வெயில் பொழி
எயிற்றன
- ஒளியை உமிழும் பற்களை   உடையன;   அவ்வீரர்
ஆவமாம் அரியபுற்று உறைவன
- அந்த வீரர்களாகிய   இராம
இலக்குவர்களின் அம்புக்  கூடாகிய  புற்றிலே   தங்கி  இருப்பன; 
முற்று   அறிவருக்கு   -   முற்றுணர்ந்த    மெய்யறிவினராகிய
முனிவர்களுக்கு;  அழிவு   செய்யும்  பாவ   காரியர் - தீமை
விளைவிக்கும் பாவிகளின்;உயிர்ப்பதம்  அலாது -   உயிராகிய
உணவை  அல்லாது;  இரை   பெறா   -   வேறு   இரையைப்
பெறாதனவாம்.
 

பகழிநாகம்-பகழியை நாகமாக உருவகித்தார். அதற்கேற்ப
நாகத்தின் செயல்களாக நக்குதல்-விடமுயிர்த்தல் புற்றுறைதல்
ஆகிய