செயல்களைக் கூறுவதால் முற்றுருவகம் ஆகும். ஆவம் - அம்பறாத்தூணி. இதனை அரிய புற்று என்றார், பதம் - உணவு பாவகாரியர்-பாவம் செய்பவர்கள் (தீயவர்). வெயில்-ஒளி அம்பைப் பாம்பாக உருவகம் செய்ததற்கேற்ப நாக்கும், பல்லும் கூறப்பட்டன. உலகை நக்கிடுவ-உலகத்தையே நாவினால் நக்கிக் கொல்லவல்லன. |
(88) |
| 6159. | 'பேருமோ ஒருவரால், அவர்களால் |
| அல்லது? இவ் பெரியவேனும், |
| நாரும் மூரியும் அறா; நம்முடைச் |
| சிலைகள்போல் நலிவ ஆமோ? |
| தாருவோ, வேணுவோ, தாணுவாய் |
| உலகினைத் தழுவி நிற்கும் |
| மேருவோ, மால் வரைக் குலம் எலாம் |
| அல்லவோ, வில்லும் மன்னோ? |
| |
வில்லும் - அவர்கள் கைக்கொண்ட விற்களும்; தாருவோ வேணுவோ- மரமோ, மூங்கிலோ (அல்ல);தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும் - தூணாக உலகத்தையே தாங்கி நிற்கின்ற; மேருவோ மால்வரைக் குலமெலாம் அல்லவோ - மேருமலையோ அல்ல பெரிய மலைகளையெல்லாம் சேர்த்தமைத்தன அல்லவோ? இவ்அவர்களால் அல்லது - இந்த வீரர்களான இராம. இலக்குவர்களை அல்லது; ஒருவரால் பேருமோ - வேறு ஒருவரால் அசைக்க இயலுமோ? நாரும் மூரியும் அறா - நாணும் வலிமையும் நீங்காதன;பெரிய வேனும் - (நமது விற்கள்) உருவத்தில் பெரியனவாயினும்; நம்முடைச் சிலைகள் போல் நலிவ ஆமோ - நம்முடைய விற்களைப் போல (அவை) நலிவன ஆமோ? |
'வில்' உகரச் சாரியை பெற்று 'வில்லு" என வந்தது. |
(89) |
| 6160. | 'உரம் ஒருங்கியது, நீர் கடையும் |
| வாலியது மார்பு; உலகை மூடும் |
| மரம் ஒருங்கிய; கராதியர், விராதனது |
| மால் வரைகள் மானும் |
| சிரம் ஒருங்கின; இனிச் செரு |
| ஒருங்கின-இனி, தேவர் என்பார் |
| பரம் ஒருங்குவது அலால், பிறிது |
| ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ? |