நீர் கடையும் வாலியது மார்பு - (இராமன் ஏவிய அம்பால்) பாற்கடலை ஒருவனாகவே கடைந்த வாலியின் மார்பு; உரம் ஒடுங்கியது - வலிமை ஒடுங்கிப் போயிற்று;உலகை மூடும் மரம் ஒடுங்கிய - உலகை மூடுமளவுக்கு ஓங்கி வளர்ந்தமராமரங்கள் ஒடுங்கின; கராதியர் விராதனது - கரன் முதலியோருடையவும் விராதனுடையதுமான; மால் வரைகள் மானும் சிரம் ஒருங்கின- பெரிய மலைகளை ஒத்ததலைகள் ஒடுங்கின; இனிச் செரு ஒடுங்கின - இனி அசுரர் போர் செய்வது ஒடுங்கின;இனி தேவர் என்பார் - இனி, தேவர்கள் என்போரிடம்;பரம் ஒருங்குவது அலால் - நமது சுமை ஒடுங்குவதல்லாது;பிறிது ஒருங்காததோர் பகையும் உண்டோ - வேறு அவர்களுக்கு ஒடுங்காத பகைவர்களும் உண்டோ? |
நீர் - இங்கே பாற்கடலைக் குறிக்கும். கராதியர் -கரன் முதலானோர். மானும்-ஒக்கும். பரம்-சுமை. அலால் - அல்லால் என்பதன் இடைக்குறை. ஒருங்குதல்-ஒடுங்குதல், அழிதல் என்ற பொருள் தந்து நின்றது. |
(90) |
| 6161. | 'சொல் வரம் பெரிய மா முனிவர் |
| என்பவர்கள், தம் துணை இலாதார், |
| "எல் வரம் பெரிய தோள் இருவரே |
| தமரொடும் உலகம் யாவும் |
| வெல்வர்" என்பது தெரிந்து, எண்ணினார், |
| "நிருதர் வேர் முதலும் வீயக் |
| கொல்வர்" என்று உணர்தலால், அவரை |
| வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார். |
| |
சொல்வரம் பெரிய - எவரும் வியந்து கூறும் வரபலம் மிக்க; மாமுனிவர் என்பவர்கள் - சிறந்த முனிவர்கள் என்போர்; தம் துணையிலாதார் - தமக்கு வரும் துன்பங்களைப் போக்கும் துணைவர் இல்லாதவராய்; எல் வரம் பெரியதோர் - சிறந்த வரபலம் பெற்ற பெரிய தோள்களையுடைய;இருவரே - இராமனும் இலக்குவனுமாகிய இருவர் மட்டுமே;தமரொடும் உலகம் யாவும் வெல்வர் - தமரோடு உலகனைத்தும் வெல்ல வல்லவராவர்; என்பது தெரிந்து - என்பதைத் தெரிந்து கொண்டதால்; எண்ணினார் - நினைத்துப் பார்த்தவர்கள்; நிருதர் வேர் முதலும் வீயக் கொல்வர் - அரக்கர்கள் அடியோடு அழிந்து |