படுமாறு கொல்வார்கள்; என்று உணர்தலால் - என்று அறிந்துணர்வதால்; அவரை வந்து அணைவதோர் - அந்த வீரர்களைத் துணையாகக்கொண்டு அடைவதற்காக ஒரு; இயைபு கொண்டார் - தொடர்பு கொண்டார்கள். |
சொல்வரம்-வியந்து கூறும் வரபலம். |
(91) |
| 6162. | 'துஞ்சுகின்றிலர்களால், இரவும் நன் |
| பகலும், நிற் சொல்ல ஒல்கி, |
| நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்; |
| "பேர் சனகி ஆம் நெடியது ஆய |
| நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் |
| நரகம்" என்று எண்ணி, நம்மை |
| அஞ்சுகின்றிலர்கள்-நின் அருள் அலால், |
| சரண் இலா அமரர் அம்மா! |
| |
பேர் சனகியாம் நெடியதாய நஞ்சு - சானகி என்ற பெயரை உடைய கொடிய விடத்தை; தின்றனர்கள் தாம் - தின்றவர்களான இவ்வரக்கர்;நரகம் நண்ணுவார் - (இறந்து) நரகம் அடைவார்கள்;என்று எண்ணி - என்று நினைத்து;நின் அருள் அலால் சரண் இலா அமரர் - இதுகாறும் உனது அருளை அல்லாது வேறு புகலிடம் இல்லாத தேவர்கள்; அஞ்சுகின்றிலர்கள் - நமக்கு அஞ்சாதவராயினர்; நிற்சொல்ல ஒல்கி - இதனை உனக்குக் கூற அஞ்சி; நெஞ்சு நின்று அயரும் இந்நிருதர் - மனம் மயங்கி நின்று வருந்தும் இந்த அரக்கர்கள்; இரவும் நன் பகலும் - இரவும் பகலுமாகிய எப்போதும்;துஞ்சுகின்றிலர்கள் - உறங்காதவராய் உள்ளனர். |
துஞ்சுதல்-தூங்குதல். ஒல்கி-பயந்து. அயரும்-மயங்கும் (சோரும்) சனகி என்னும் பெரு நஞ்சு (9921) என்று பின்பும் கூறுவான். |
(92) |
| 6163. | 'புகல் மதித்து உணர்கிலாமையின், நமக்கு |
| எளிமை சால் பொறைமை கூர, |
| நகல் மதிக்கில மறுப் பொலிய |
| வாள் ஒளி இழந்து, உதயம் நண்ணும் |
| பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம், |
| இரவு கால் பருவ நாளின் |