| அகல் மதிக்கு உவமை ஆயின |
| தபோதனர் உளார் வதனம் அம்மா? |
| |
தபோதனர் உளார்வதனம் - தவச்செல்வர்களான முனிவர்களது முகங்களெல்லாம்;புகல்மதித்து உணர்கிலாமையின் - முன்பு, தங்களுக்குப் பாதுகாப்பு எதுவென மதித்து அறியாமையால்; நமக்கு எளிமை சால் - நமக்கு எளியவர்களாகவும்;பொறைமை கூர - மிகுந்த பொறுமை உள்ளவர்களாகவும்; நகல் மதிக்கில - மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும்;மறுப்பொலிய வாள் ஒளி இழந்து - கறை விளங்க, நல்ல ஒளியை இழந்து;உதயம் நண்ணும் - சூரியன் உதித்தபின் காணப்படும்;பகல் மதிக்கு உவமையாம் - பகலில் தோன்றும் மதியை ஒத்துக் காணப்பட்டன;விபுதராம் - தவமுனிவர்களாகிய அவர்கள் (முகங்கள்); இரவு கால் பருவ நாளின் - இரவுக்காலத்தில் பௌணர்மியில் தோன்றும்; அகல் மதிக்கு உவமை ஆயின - முழு மதிக்கு உவமை ஆயின. |
புகல்-பாதுகாப்பான இடம். நகல் - மகிழ்ச்சி. பருவ காலம்-பௌர்ணமி நாள். வதனம்-முகம். தபோதனர்; விபுதர் -முனிவர்கள். |
(93) |
| 6164. | 'சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு, |
| உரு ஒளித்து, உலைதல் செய்வார்,- |
| இந்துவின் திரு முகத்து இறைவி |
| நம் உறையுளாள் என்றலோடும்,- |
| அந்தகன் முதலினோர், அமரரும் |
| முனிவரும் பிறரும், அஞ்சார் |
| வந்து, தம் உலகமும் வானமும் |
| கண்டு உவந்து, அகல்வர் மன்னோ. |
| |
சிந்து முந்து உலகினுக்கு - (நமக்குப் பயந்து) கடல் பொங்கி எழும் இந்த உலகத்துக்கு அப்பால்;இறுதி புக்கு - முடிவிடமான கடைசியில் சென்று;உரு ஒளித்து - தங்கள் வடிவத்தை ஒளித்து, வேற்றுருவத்தில் வாழ்ந்து; உலைதல் செய்வார் - வருந்தித் தவித்தவர்கள்; இந்துவின் திருமுகத்து இறைவி - மதியைப்போன்ற திருமுகத்தை உடைய தெய்வமகளான சீதாபிராட்டி; நம் உறையுளாள் - நமது உறைவிடமான இலங்கையில் இருக்கிறாள்;என்றலோடும் - என்று தெரிந்தவுடன்; அந்தகன் முதலினோர் - எமன் முதலானவர்களும்; அமரரும் முனிவரும் - தேவர்களும், |