பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 63

முனிவர்களும்;  பிறரும்  -   மற்றுமுள்ளவர்களும்   (கின்னரர்
முதலானோர்);  அஞ்சார் - அச்சமில்லாதவர்களாக;  வந்து தம்
உலகமும்     வானமும்    கண்டு   
-    வந்து,   தங்கள்
விண்ணுலகத்தையும்  வானத்தையும்   பார்த்து   விட்டு; உவந்து
அகல்வர்
- மகிழ்ந்து செல்வதாயினர்.
 

சிந்து-கடல். முந்துதல்-பொங்குதல். இந்து-சந்திரன். அந்தகன்-
எமன். பிறர் கின்னரர் முதலானோர்.
 

(94)
 

6165.

'சொலத் தகாத் துன்னிமித்தங்கள்

எங்கணும் வரத் தொடர்வ; ஒன்னார்,

வெலத் தகா அமரரும் அவுணரும்,

செருவில் விட்டன விடாத

குலத்த கால் வய நெடுங் குதிரையும்,

அதிர் குரல் குன்றும், இன்று

வலத்த கால் முந்துறத் தந்து, நம்

மனையிடைப் புகுவ மன்னோ.

 

சொலத்தகாத்துன்னிமித்தங்கள்  -   சொல்லி   முடியாத
எத்தனையோ கெட்ட சகுனங்கள்;எங்கணும் வரத் தொடர்வ -
எங்கும் தொடர்ந்து காணப்படுகின்றன;ஒன்னார் வெலத்தகா -
பகைவர்களால்  வெல்ல முடியாதவையான; விடாத குலத்தகால்
வயநெடுங்குதிரையும்
-  நீங்காத சிறந்த குலப்பிறப்பை உடைய
வலி   சிறந்த  நமது  குதிரைகளும்; அதிர் குரல் குன்றும்
பகைவர்   அஞ்சும்படி  பிளிறும்  குரல் வாய்ந்த மலை போன்ற
நமது   யானைகளும்; அமரரும்   அவுணரும் - தேவர்களும்
அரக்கர்களும்;செருவில்  விட்டன -  செய்த போரில் பங்கு
கொண்ட அவை;நம்மனையிடை  -   நமது  இல்லங்களிலே;
வலத்தகால் முந்துறத் தந்து புகும் - வலது காலை முன்னே
வைத்துப் புகுகின்றன.
 

குலம்-நல்ல குடிப்பிறப்பு.  வயம்-வலிமை.  சொலத்தகா -
வெலத்தகா   என்பன சொல்லத்தகா, வெல்லத்தகா என்பதன்
தொகுத்தல்   விகாரம். யானையும்,  குதிரையும் வலக் காலை
முன்னே  தூக்கி   வைத்து வீட்டுக்குள் புகுவது துர்நிமித்தம்
என்பது   உலக  வழக்காகும்.   அடுத்தபாடல்களிலும்  பல
துன்னிமித்தங்கள் கூறப்படுகின்றன.
 

(95)
 

6166.

'வாயினும் பல்லினும் புனல் வறந்து

உலறினார், நிருதர்; வைகும்