பக்கம் எண் :

64யுத்த காண்டம் 

பேயினும் பெரிய பேம் நரிகளும்

புரிதரும்; பிறவும் எண்ணின்,

கோயிலும் நகரமும், மட நலார்

குழலும், நம் குஞ்சியோடும்,

தீயின் வெந்திடுமலால் ஒரு

நிமித்தம் பெறும் திறனும் உண்டோ?

 

நிருதர்  வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார்
- அரக்கர்கள்  வாயிலும்   பல்லிலும்  நீர்   வறண்டு   போய்
பொலிவிழந்தனர்;வைகும் பேயினும் பெரிய பேம் நரிகளும்
புரிதரும்  
-   தங்கியிருக்கும்   பேய்களும்   அவற்றைவிடப்
பெரியனவாகிய அச்சம் தரும் நரிகளும் பல்கிப்  பெருகுகின்றன;
பிறவும்  எண்ணின்
- வேறும் நினைப்போமாயின்;  கோயிலும்
நகரமும்
- நமது அரண்மனையும், இலங்கைமாநகரமும்;மடநலார்
குழலும்
- இளம் பருவத்தினரான நமது மகளிரின் கூந்தலும்; நம்
குஞ்சியோடும்
- நமது தலைமுடியுடனே;தீயின் வெந்திடும் -
நெருப்பிலே  வெந்து  கருகும்;அலால்  ஒரு   நிமித்தம்  -
இவையல்லாத ஒரு நல்ல நிமித்தம்; பெறும் திறனும் உண்டோ
- பெறும் வகை நமக்குள்ளதோ?
 

வறந்து   -   வற்றிப்போய்.  உலறினார்  -   உலர்ந்து
பொலிவிழந்தார்.  கண்ணும்  முகமும்  உலறி  (சீவக. 2996)
கோயில்-அரண்மனை குஞ்சி-ஆண்கள் தலைமயிர்.  பேம்-
அச்சம்,  மடம்.   இளமை.   நல்லார் என்பது 'நலார்' என 
நின்றது   தொகுத்தல்   விகாரம்.    'உண்டோ'   ஓகாரம் 
எதிர்மறைப்  பொருள்  தந்து  நின்றது;   இல்லை என்பது
பொருள்.
 

(96)
 

6167.

'சிந்த மா நாகரைச் செரு முருக்கிய

கரன், திரிசிரத்தோன்,

முந்த மான் ஆயினான், வாலியே

முதலினோர் முடிவு கண்டால்,

அந்த மான் இடவனோடு, ஆழி மா

வலவனும், பிறரும், ஐயா!

இந்த மானிடவராம் இருவரோடு

எண்ணல் ஆம் ஒருவர் யாரே?

 

ஐயா  - தலைவனே! சிந்த மாநாகரைச் செருமுருக்கிய -
சிறந்த தேவர்களை எல்லாம் சிதறும்படி போரில் வலிமை அழித்த;
கரன்,  திரி சிரத்தோன் -  கரனும்  திரிசிரனும்;முந்த மான்
ஆயினான்
- முன்னே மாய மானாக வந்த மாரீசனும்; வாலியே