பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 65

முதலினோர் - கிட்கிந்தை மன்னனான வாலி முதலானவர்களும்;
முடிவு  கண்டால்  -   இராம  லக்குவரால்  இறந்தழிந்தார்கள்
என்பதை அறிந்தால்;அந்த மான் இடவனோடு - மான் போன்ற
உமையவளை     இடப்புறத்தில்     கொண்ட     சிவபிரானும்;
ஆழிமாவலவனும் -   சக்கரப் படையை உடைய வல்லவரான
திருமாலும்;  இந்த   மானிடவராம்  -  இந்த மனிதர்களாகிய;
இருவரோடு -   இராமன்,   இலக்குவன் என்ற இருவருடனே;
எண்ணலாம் ஒருவர் யாரே
- நிகராக எண்ணத் தகுந்த ஒருவர்
யார் இருக்கிறார்கள்?
 

நாகர்-தேவர்கள். சிந்த-சிதறியோட. செரு-போர். முருக்கிய-
வலிமையை   அழித்த மான்.   இடவன்-மானை  இடக்கரத்தில்
ஏந்திய சிவன் எனவும் கொள்ள இடமுண்டு.
 

(97)
 

6168.

'இன்னம் ஒன்று உரை செய்தால்;

இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய

அன்னவர் தம்மொடும் வானரத்

தலைவராய் அணுகி நின்றார்,

மன்னும் நம் பகைஞர் ஆம்

வானுளோர்; அவரொடும் மாறுகோடல்

கன்மம் அன்று; இது நமக்கு உறுதி

என்று உணர்தலும், கருமம் அன்றால்.

 

எம்பிரான்! -  எமது தலைவனே!இன்னம்  ஒன்று உரை
செய்தால்
-  இன்னும் ஒன்று கூறுவதானால்;இனிது  கேள் -
அதனை  இனிதே   கேட்பாயாக;     இருவராய   அன்னவர்
தம்மொடும்
- இருவரான  ராம, இலக்குவர்களோடும்; மன்னும்
நம்  பகைஞர்  ஆம்  வானுளோர் 
-   நிலைபெற்ற  நமது
பகைவர்களாகிய விண்ணுளோர்; வானரத் தலைவராய் அணுகி
நின்றார் 
-   வானரத்  தலைவர்களாக  நெருங்கி   நின்றனர்;
அவரொடு     மாறுகோடல் 
-   அவர்களோடு   மாறுபாடு
கொள்ளுதல்;  கன்மம்  அன்று -   காரியம்   ஆகாது;  இது
நமக்கு உறுதி  என்று  உணர்தலும்   கருமம்   அன்று
-
இவ்வாறு  பகைத்துக்   கொள்ளுதல்  உறுதி   என உணர்வதும்
செய்யத் தக்கதல்ல.
 

தேவர்களே    வானரர்களாக   வந்தனர்   என   முன்னர்
குறிக்கப்பட்டுள்ளது. (199) மாறுகோடல்-பகைத்துக் கொள்ளுதல்.
 

(98)