| வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் |
| தோள் தடங்களும் குலுங்க, நக்கு, இவை இவை |
| சொன்னான்: |
| |
கேட்ட ஆண்தகை - வீடணன் கூறிய மொழிகளைக் கேட்ட ஆண்மை மிக்கவனாகிய இராவணன்; கரத்தொடு கரதலம் கிடைப்பப்பூட்டி - கையோடு கை பொருந்த விரல்களைக் கோத்துக்கொண்டு;வாய்தொறும் - பத்து வாய்களிலும் உள்ள; பிறைக்குலம் - பிறைச்சந்திரனைப் போன்ற பற்கள்; வெண் நிலாப் பொழிய - வெள்ளிய நிலவொளியைப் பொழிய; வாள் தடம் தவழ் ஆரமும் - வாளால் உளவாகிய விழுப்புண் தழும்பின் மீது தவழும் மார்பும்; வயங்கு ஒளி மார்பும் - விளங்கும் ஒளியுடைய மார்பும்; தோள் தடங்கலும் குலுங்க நக்கு - தோள்களாகிய மலைகளும் குலுங்கும் படி சிரித்து; இவை இவை சொன்னான் - பின்வருமாறு கூறலானான். |
கரதலம் - கை. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பிறைக்குலம் - பிறைச்சந்திரனைப் போன்ற கோரைப் பற்கள். ஆண்டகை -ஆண்மை மிக்கவன். நக்கான் - (கோபச் சிரிப்பு) சிரித்தான். வாள்தடம் - போரிலே வாள்கள் பட்டு, விழுப்புண்ணான இடம். விழுப்புண் விளைத்த தழும்புகள் ஆரம் மறைத்தது. குலுங்கி சிரித்தபோது தழும்புகள் தெரிந்தன. பிறை உவமையாகுபெயராய்க் கோரைப்பற்களைக் குறித்தது. |
(100) |
| 6171. | ' "இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென்" |
| என்றாய்; |
| பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக் |
| கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை; குறித்தது, |
| அச்சமோ? அவர்க்கு அன்பினோ? |
| யாவதோ?-ஐயா! |
| |
ஐயா! இச்சை அல்லன உறுதிகள் - நான் விரும்பத்தகாத உறுதிகளை; இசைக்குவென் என்றாய் - எனக்குச் சொல்வேன் என்றாய்; பிச்சர் சொல்லுவ சொல்லினை - பித்தர்கள் கூறுவதைக் கூறினாய்;என் பெரு விறலை - எனது பேராற்றலை; கொச்சை மானிடர் - அற்பமான மனிதர்கள்; வெல்குவர் என்றனை - வெல்லுவார்கள் என்று கூறினாய்;குறித்தது - இவ்வாறு குறிப்பிட்டுக் கூறியது; அச்சமோ - அந்த மனிதர்களிடம் கொண்ட |