அச்சத்தாலோ? அவர்க்கு அன்பினோ - அவர்களிடம் நீ கொண்ட அன்பு காரணமாகவா? யாவதோ - அல்லது வேறேதேனும் காரணம் கருதியோ? |
பிச்சர்-பித்தர். விறல்-வலிமை, கொச்சை - இழிவு (அற்பம்) "தெள்ளிய பொருள் இயம்பலாற்றுவன்" என வீடணன் முன் கூறியதை நினைத்து 'உறுதிகள் இசைக்குவன் என்றாய்" என்றான் என்க. 'உறுதிகள் சொல்வதாகத் தொடங்கி பித்தர் போல் பிதற்றுகிறாயே' என வீடணன் கூறியதை எள்ளுகிறான். |
(101) |
| 6172. | ' "ஈங்கு மானுடப் பசுக்களுக்கு, இலை வரம்" |
| என்றாய்; |
| தீங்கு சொல்லினை; திசைகளை உலகொடும் |
| செருக்கால் |
| தாங்கும் யானையைத் தள்ளி, அத் தழல் |
| நிறத்தவனை |
| ஓங்கல் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது |
| உண்டோ? |
| |
ஈங்கு மானுடப்பசுக்களுக்கு - இங்கே மனிதர்களாகிய இந்தப் பசுக்களைக் கொல்ல; இலைவரம் என்றாய் - நான் (பிரமனிடம்) வரம் பெறவில்லை என்று கூறினாய்; தீங்கு சொல்லினை - இதனால் பழுதானதையே கூறினாய்; திசைகளை உலகொடும் செருக்கால் தாங்கும் - எல்லாத் திசைகளையும் உலகத்தோடு தமது வலிமையால் தாங்கும்;யானையைத் தள்ளி - திக்கு யானைகளை வென்று விலக்கிட;அத்தழல் நிறத்தவனை - அந்தத் தீ நிறத்தவனான சிவபிரானை; ஓங்கல் ஒன்றொடும் - அவனிருக்கும் கைலை மலையோடும்;எடுக்கவும் வரம் கொண்டதுண்டோ? - பேர்த்து எடுப்பதற்கு வரம் கேட்டுப் பெற்றதுண்டோ? |
'மனிதர்பால் கொற்றம் கொள்ளலை' (6148) என்று வீடணன் கூறியதை எண்ணி, 'இலைவரம்' என்றாய் என்றான். |
(102) |
| 6173. | 'மனக்கொடு அன்றியும், வறியன வழங்கினை; |
| வானோர் |
| சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் |
| செய்த? |