பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 87

- முன்னோனாகிய   இரணியனுடைய;  காதில்  குண்டலங்கள் -
காதிலணியும் காதணிகளாம்;இனிப் பெரு விறல் கூறல் - என்றால்
அவனுடைய சிறந்த வீரத்தை எடுத்துக் கூறுவதற்கு;  மற்று என் -
வேறு என்ன வேண்டியுள்ளது?
 

தருகதிரவன் - ஒளியினால் காக்கும்  சூரியன்.   எண்தலம் -
எண்ணுதற்குக் கருவியாகிய மனம். இரண்யம் - பொன். அக்ஷம் -
கண், பொற்கணான் - இரண்யாட்சன்.
 

(12)
 

6201.

'மயர்வு இல் மன் நெடுஞ் சேவடி மண்ணிடை

வைப்பின்,

அயரும், வாள் எயிற்று ஆயிர நனந் தலை அனந்தன்;

உயருமேல், அண்ட முகடு தன் முடி உற உயரும்;

பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்.

 

மயர்வு இல் மன்- எதனாலும் மனம் சோர்வுறாத மன்னனாகிய
இரணியன்;  நெடுஞ்சேவடி -   தனது  நீண்ட பெரிய பாதங்களை;
மண்ணிடைவைப்பின் -   தரையிலே   வைப்பானாயின்; ஆயிரம்
நனந்தலை   அனந்தன்  
-   ஆயிரம்   படங்களைக் கொண்ட
(பூமியைத்தாங்கும்) ஆதிசேடன்; அயரும் -   (பாதங்களின்  கனம்
தாங்காது) தளர்வான்;  உயருமேல் -  (அந்த இரணியன்)  எழுந்து
நிற்பானாயின்;அண்டமுகடு தன் முடி உற உயரும்- அண்டத்தின்
மேல் முகடு தனது தலையில் பொருந்த உயர்வான்;  பெயரு மேல்
- அவன், இடத்தை விட்டு அசைவானாயின்; நெடும் பூதங்கள் -
பெரியனவான  பூதங்கள்;ஐந்தொடு   பெயரும் -  ஐந்தினோடும்
பெயர்வான்.
 

மயர்வு - சோர்வு. நனந்தலை - பணாமுடி  (படம்).  வாள் -
கூர்மை (ஒளியுமாம்).
 

(13)
 

6202.

'பெண்ணில், பேர் எழில் ஆணினில், அலியினில்,

பிறிதும்

உள் நிற்கும் உயிர் உள்ளதில், இல்லதில், உலவான்;

கண்ணில் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;

மண்ணில் சாகிலன்; வானிலும் சாகிலன்;-வரத்தால்.

 

வரத்தால் - இரணியன் தான் பெற்ற வரத்தின் வலிமையால்;
பெண்ணில் பேரெழில் ஆணினில் - பெண்களாலோ, பேரழகு
படைத்த ஆண்களாலோ; அலியினில் - இவையிரண்டுமல்லாத