பக்கம் எண் :

88யுத்த காண்டம் 

அலியினாலோ; பிறிதும் உள்நிற்கும் -  வேறு,  உலகத்தில்  நிலை
பெற்றுள்ள; உயிர் உள்ளதில் இல்லதில் - உயிருள்ளவைகளாலோ,
உயிர் இல்லாதவைகளாலோ;உலவான் -  சாகமாட்டான்;  கண்ணில்
காண்பன
- கண்ணால் காணப்படுவனவாலும்;கருதுவ - எண்ணத்தில்
நினைக்கப்படுவனவற்றாலும்;   யாவினும்   கழியான்  -   இவை 
எவற்றாலும்  அழியமாட்டான்;  மண்ணில் சாகிலன் -  நிலத்திலும்
சாகமாட்டான்; வானிலும் சாகிலன் - விண்ணிலும் சாகமாட்டான்.
 

(14)
 

6203.

'தேவர் ஆயினர் ஏவரும், திரிதரும் இயக்கர்

யாவரேயும், மற்று எண்ணவும் நினைக்கவும் இயன்ற,

கோவை மால், அயன், மான்இடன், யாவரும்

கொல்ல,

ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்-அனையான்.

 

அனையான் - அந்த இரணியன்; தேவர் ஆயினர் ஏவரும்-
தேவர்கள் எவரும்;திரிதரும் இயக்கர் யாவரேயும் -  நடமாடித்
திரியும் இயக்கர் எவரும் பிறரால்; மற்று எண்ணவும் நினைக்கவும்
இயன்ற
-  மற்றும்  தியானிக்கவும்  துதிக்கவும்  முடிந்தவர்களான;
கோவை மால், அயன், மான்இடன் 
-   திரிமூர்த்திகள்   என்ற
வரிசையிலுள்ள மால், பிரமன்,  உமையாகிய  பெண்ணை இடப்புறம்
கொண்டுள்ள சிவன்;யாவரும் கொல்ல ஆவி தீர்கிலன் - ஆகிய
எவரும் கொல்ல உயிர்நீங்கான்;ஆற்றலும் தீர்கிலன் - வலிமையும்
நீங்கமாட்டான்;
 

'எண்ணவும், நினைக்கவுமே இயன்றவர்' என்பதால் கண்களுக்குப்
புலனாகாதவர் என்பது  கருத்து.  கோவை - வரிசை, நிரல். மான் +
இடன்; மானை இடக்கையில் தரித்தவன் எனலும் ஆம்.
 

(15)
 

6204.

'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த

மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும்,

மாளான்;

ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்

சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா.

 

நீரின்  சாகிலன் நெருப்பினும் சாகிலன்  -  தண்ணீரால்
சாகமாட்டான் தீயாலும் சாகமாட்டான்;நிமிர்ந்த மாருதத்தினும்
- மேல் நிமிர்ந்த காற்றினாலும்; மண்ணின் மற்று எவற்றினும்