பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 89

மாளான் -   மண்ணுலகிலுள்ள வேறு எதனாலும் சாக மாட்டான்;
ஓரும்   தேவரும் முனிவரும் - ஆராய்ந்துணரும் தேவர்களும்
தவவலிமை   மிக்க  முனிவர்களும்;  பிறர்களும்   உரைப்ப -
மற்றவர்களும் சினந்து கூற;சாரும் சாபமும் -   அதனால் வரும்
சாபங்களும்;  அன்னவன்   தனைச்  சென்று  சாரா - அந்த
இரணியனைச் சென்று அடையா.
 

(16)
 

6205.

'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்

கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும்

கொல்லா;

நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்

கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர்

கொள்வார்?

 

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் - வீட்டுக்கு
உள்ளேயும் சாகமாட்டான், வெளியிலும் சாகமாட்டான்; உலவாக்
கொள்ளைத் தெய்வவான் படைக்கலம்
- என்றும் அழியாது,
தெய்வத்தன்மையுடைய படைக்கலங்கள்;யாவையும் கொல்லா
- எவையும் அவனைக்  கொல்லமாட்டா;  நள்ளின்  சாகிலன்
பகலிடைச் சாகிலன்
-   இரவிலும்  சாகான்  பகலிலும்  சாக
மாட்டான்;நமனார்  கொள்ளச்  சாகிலன் - எமன் உயிரைக்
கவரவும் இறக்கமாட்டான்; ஆர் இனி அவனுயிர் கொள்வார்
- அவனது உயிரைக் கவரவல்லோர் யார் இருக்கிறார்கள்?
 

'உள், புறம்' என்பன வீட்டுக்குள்ளே, வெளியே என்னும்
பொருளன, கொள்ளை - மிகுதி. நள் - இரவு.
 

(17)
 

6206.

'பூதம் ஐந்தொடும் பொருந்திய உணர்வினில் புணரா

வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால்

விளியான்;

தாதை தன்னைத் தான் தனிக் கொலை சூழினும்,

சாகான்;

ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன்.

 

பூதம் ஐந்தொடும் பொருந்திய - மண்முதலிய ஐந்து பூதங்கள்
உடன் பொருந்திய;உணர்வினில் புணரா - சுவைமுதலான ஐம்புல
உணர்வினால் புணர்க்கப்படாத;  வேதம்  நான்கினும்  விளம்பிய
-   நான்கு   வேதங்களாலும்   சொல்லப்பட்ட;   பொருள்களால் 
விளியான்