பக்கம் எண் :

90யுத்த காண்டம் 

-  மந்திரங்களாலும்  சாகான்; தாதை   தன்னைத்தான்  தனிக்
கொலை சூழினும் சாகான்
- தன் தந்தையே அவனைத் தனித்துக்
கொலை செய்யநினைத்தாலும் சாகமாட்டான்;ஈது அவன் நிலை -
இதுதான்   அந்த   இரணியனது நிலைமை;  எவ்வுலகங்கட்கும்
இறைவன்
- எல்லா உலகங்களுக்கும் அவனே இறைவனாவான்;
 

வேதங்களில்   கூறப்பட்ட   மந்திரங்கள்  புலன் உணர்வால்
அறியக் கூடாதனவாம். மெய்யுணர்வால்  மட்டுமே உணரத்தக்கன
அவை.   'நிறை   மொழி   மாந்தர்   பெருமை   நிலத்து மறை
மொழிகாட்டுவிடும்' என்று குறள் கூறுமாறு இம்மந்திரச் சொற்கள்
ஆக்கவும் அளிக்கவும் வல்லன.
 

(18)
 

இரணியனது மகன் பிரகலாதன் தன்மை
 

6207.

'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,

தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,

நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,

தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு

தக்கோன்.

 

ஆயவன் தனக்கு அருமகன்- அந்த இரணியனுக்கு அரிய
ஒரு  மைந்தன்;  அறிஞரில் அறிஞன் -  அறிவாளிகளில் சிறந்த
அறிவாளி;  தூயர்   என்பவர்   யாரினும்  -  தூயவர் என்று
சொல்லப்படும்   எவரைவிடவும்;   மறையினும்   தூயான் -
வேதங்களை  விடவும்   தூயவன்;  நாயகன்  தனி   ஞானி -
எவ்வுயிர்க்கும் தலைவன், ஒப்பற்ற  ஞானி;  நல்   அறத்துக்கு
நாதன்
- நல்ல அறங்களுக்குத்    தலைவன்;  மன்னுயிர்க்குத்
தாயின் அன்பினன்
- உலகத்து உயிர்களுக்குத் தாயினும் சிறந்த
அன்புடையவனாய்;  உளன்   ஒரு   தக்கோன்   - மேலான
தகுதியுடைய ஒருவனாக உள்ளான்.
 

'அருமகன் ஒரு தக்கோன் உளன்' என இயையும். ஆயவன்
அத்தகையவனான   இரணியன். தூயர் மன, மொழி, மெய்களால்
தூயவர்களாய   நல்லோர்.   தாயின் - தாயைவிடவும் (தாயினும்
நல்லன்)
 

'அறிஞரில்   தூயோன்' (6234) எனப் பின்னரும் பிரகலாதன்
குறிக்கப்படுவான்.   வீடணனை   அறிஞரின்   மிக்கான் (6169),
'மேதாவிகட்கெல்லாம்   மேலான  மேன்மையான்' (6364) எனக்
கம்பர் குறித்துள்ளமை ஒப்பிட்டு உணரத்தக்கது.
 

(19)