பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 91

இரணியன் தன் மகனை வேதம் ஓதுமாறு கூறுதல்
 

6208.

'வாழியான்-அவன்தனைக் கண்டு, மனம் மகிழ்ந்து,

உருகி,

"ஆழி ஐய! நீ அறிதியால், மறை" என

அறைந்தான்-

ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம்

ஏழும் ஏழும் வந்து அடி தொழ, அரசு வீற்றிருந்தான்.

 

ஊழியும்   கடந்து   உயர்கின்ற   ஆயுளான்  - உலக
முடிவுக்காலமான  ஊழிக்காலத்தையும்   கடந்து நீண்ட ஆயுளை
உடையவனும்; உலகம் ஏழும் ஏழும்- பதினான்கு உலகங்களும்;
வந்து அடிதொழ
-  திரண்டு வந்து தனது பாதங்களில் வீழ்ந்து
வணங்குமாறு; அரசு வீற்றிருந்தான் - எல்லா உலகங்களுக்கும்
தானே  மன்னனாக  ஆட்சி  செலுத்துபவனுமான   இரணியன்;
வாழியான் அவன்   தனைக்  கண்டு
-   நல்வாழ்வுக்குரிய
நற்பேறு  பெற்ற பிரகலாதனைப்  பார்த்து;  மனம்   மகிழ்ந்து
உருகி
- மனம் மிக மகிழ்ந்து  உள்ளம்  உருகி;  ஆழிஐய நீ
அறிதியால் மறை
- எனக்குப் பின்  எனது   ஆணையாகிய
சக்கரத்தை இயக்கும் நீ எல்லா  வேதங்களையும்  கற்பாயாக;
என அறைந்தான்
- என்று கூறினான்;
 

ஆழி -   ஆணையாகிய   சக்கரம். தனக்குப் பின் அரசாள
இருப்பவன் என்பதால் இரணியன் 'ஆழி ஐய' என அழைத்தான்
என்க.   மனம்   மகிழ்ந்து  உருகி - நெஞ்சு நெகிழ்ந்து உருகி
தந்தைக்கு உரிய இயல்பான அன்பின் நெகிழ்ச்சி இரணியனுக்கும்
இருந்தது  என்பதைக்  கவிச்சக்கரவர்த்தி  இப்பாடலில் குறித்து
இருக்கிறார்.
 

(20)
 

6209.

'என்று, ஓர் அந்தணன், எல்லை இல் அறிஞனை

ஏவி,

"நன்று நீ இவற்கு உதவுதி, மறை" என நவின்றான்;

சென்று மற்றுஅவன்தன்னொடும் ஒரு சிறை

சேர்ந்தான்;

அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான்.

 

என்று, ஓர் அந்தணன் - என்று கூறிய இரணியன் ஒரு மறை
வல்லோனான;எல்லை இல் அறிஞனை ஏவி - எல்லையில்லாத
அறிவுடையவனை ஏவி; 'நன்று நீ இவற்கு உதவுதி மறை' - நீ
இவனுக்கு வேதங்களை நன்கு கற்றுக் கொடுத்து உதவுவாயாக;