பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 93

"வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை" எனவரும்
பெரியாழ்வார் திருமொழி (4, 3, 11) நினைவுகூரத்தக்கது.
 

(22)
 

6211.

' "ஓம் நமோ நாராயணாய !" என்று உரைத்து, உளம்

உருகி,

தான் அமைந்து, இரு தடக் கையும் தலைமிசைத்

தாங்கி,

பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர்ப் புறம் பொடிப்ப,

ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி,

 

ஞானநாயகன் - ஞானம் மிக்க தலைவனாகிய பிரகலாதன்;'ஓம்
நமோ நாராயணாய'
- ஓம் நமோ நாராயணாய நம;என்றுரைத்து -
என்னும் திருமந்திரத்தை   உச்சரித்து;  உளம்   உருகி -   மனம் 
நெகிழ்ந்து உருகி;தான் அமைந்து -   தான்   அடங்கி   இருந்து;
இருதடக்   கையும்   தலைமிசை   தாங்கி - தனது இரு நீண்ட
கைகளையும் தலையின் மீது சேர்த்து;   பூநிறக்   கண்கள் புனல்
உக
- தாமரை மலர் போன்ற இரு கண்களிலும்   கண்ணீர் பெருக;
மயிர்ப்   புறம்  பொடிப்ப -  உடல்  முழுதும்   மயிர்சிலிர்க்க;
இருந்தனன் - அமர்ந்திருந்தான்;  அந்தணன் நடுங்கி - அதைக்
கண்ட ஆசிரியனாகிய மறையவன் நடுக்க மெய்தி.
 

கருவிலே திருவுடையவனாகிய   பிரகலாதன் இளமையிலேயே
ஞானம்  மிக்கவனாக, ஏனைய ஞானிகளுக்கெல்லாம் தலைவனாக
விளங்கினான் என்பதால் 'ஞான நாயகன்" என்றார்.  பூ;  தாமரை.
பூவெனப்   படுவது   பொறிவாழ்  பூவே   ஆதலின்   தாமரை
எனப்பட்டது.  நிறம்:  அழகு.  அந்தணன் நடுங்கி என்ற வினை
எச்சம் அடுத்த பாடலில் வரும் என்றான் என்ற வினை கொண்டு
முடியும்.
 

(23)
 

6212.

' "கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்;

கெடுவாய் !

படுத்து ஒழிந்தனை; பாவி ! எத் தேவரும் பகர்தற்கு

அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின்

அறிவில்

எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?"

என்றான்.