பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 95

வேதமுதற்பெயர்பிரணவம்.  அதனால்  சுட்டப்படும்  பொருள்
நாராயணன். அந்தப் புனிதமான பெயரைக்  கூறிய   நான்  என்ன
குற்றம் செய்தேன் என்றான்.
 

(25)
 

6214.

' "முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும்,

முதலோன்

உந்தை; மற்று அவன் திருப்பெயர் உரைசெயற்கு

உரிய

அந்தணாளனேன் என்னினும் அறிதியோ? ஐய !

இந்த இப் பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்"

என்றான்.

 

ஐய -  ஐயனே;  முந்தை   வானவர்    யாவர்க்கும் -
முற்பட்டவர்களான தேவர்கள் எல்லோருக்கும்; முதல்வர்க்கும்
- அத்   தேவர்களுக்கு  முதல்வர்களான  அயன்  அரி, சிவன்
ஆகியோருக்கும்; முதலோன் உந்தை -  முதன்மை   பெற்று
விளங்குபவன்  உனது  தந்தையான  இரணியன்;மற்று  அவன்
திருப்பெயர்
- உனது தந்தையின் திருநாமத்தை;உரை செயற்கு
உரிய அந்தணாளனேன்
- சொல்லுதற்குரிய அந்தணனாக நான்
உள்ளேன்;  என்னிலும் அறிதியோ -  இங்கு என்னை விட நீ
எல்லாம் தெரிந்தவனோ?;  இந்த   இப்பெயர்   உரைத்து -
இப்போது நீ சொன்ன  இந்தப்   பெயரைச்   சொல்லி;எனைக்
கெடுத்திடல்   என்றான் 
  -   என்னைக் கெடுத்து விடாதே'
என்றான்.
 

(26)
 

6215.

'வேத பாரகன் அவ் உரை விளம்பலும், விமலன்,

"ஆதி நாயகன் பெயர் அன்றி; யான் பிறிது

அறியேன்;

ஓத வேண்டுவது இல்லை; என் உணர்வினுக்கு

ஒன்றும்

போதியாததும் இல்லை" என்று, இவை இவை

புகன்றான்:

 

வேதபாரகன் அவ்வுரை விளம்பலும் - வேதங்களை அறிந்த
அந்தணனாகிய   ஆசிரியன்   இவ்வாறு    கூறவும்;   விமலன் -
குற்றமற்றவனான பிரகலாதன்;ஆதி   நாயகன் பெயர் அன்றி -
எல்லா  உலகங்களுக்கும்  முதல் தலைவனான   அப்பரமன் திருப்
பெயர் அல்லாது;யான் பிறிது அறியேன் - நான் வேறெதுவும்