பக்கம் எண் :

96யுத்த காண்டம் 

அறியமாட்டேன்; ஓத வேண்டுவதில்லை - நான் கற்றுக் கொள்ள
வேண்டியதும்   (அப்பரமன்   பெயரல்லாது)   வேறில்லை;  என்
உணர்வினுக்கு
- எனது அறிவுக்கு;  ஒன்றும்   போதியாததும்
இல்லை
- ஒன்றும் உணர்த்தப் படாத பொருள்  இல்லை;என்று
இவை இவை புகன்றான்
- என்று மேலும் சில கூறுவானானான்.
 

(27)
 

6216.

' "தொல்லை நான்மறை வரன்முறைத் துணி

பொருட்கு எல்லாம்

எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம் கொண்டது,

என் உள்;

இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத,

வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத.

 

தொல்லை நான் மறை - பழமையான  நான்கு வேதங்களும்;
வரன்  முறைத்  துணி  பொருட்கு  எல்லாம்
- மரபு பிறழாது
துணிந்து கூறிய  பொருள்களுக்கெல்லாம்; எல்லை கண்டவன் -
முடிவான எல்லை கண்டவனாகியபரனே;  என்  அகம்  புகுந்து
இடம்  கொண்டது
-  எனது  உள்ளத்திலே   புகுந்து  விரும்பி
உறைவது;என் உள் - எனக்குள்ளாகும்;வேறு இனிப் பெரும்பதம்
இல்லை
-  இதைவிட  வேறு  சிறந்தபதம்   எதுவுமில்லை; யான்
அறியாதவல்லையேல்
-  நான்    அறியாதவை    ஏதேனும்  நீ
வல்லவனானால்;நீதியின் வழாத இனி ஓதுவி- நீதி நெறி பிறழாத
ஒன்றை இனி எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக.
 

வரன்முறை  - மரபுநெறி.  துணி  பொருள் - அறுதியிட்டு
துணிந்துரைத்த  பொருள்.   எல்லைகண்டவன்.  முடிவிடமாக
அமைந்தவன். இடம் கொண்டது. விரும்பி வாழ்வது. அகம் -
மனம். என் உள் - எனக்குள். பதம். நிலை (பதவி); பெயருமாம்.
நீதியின் வழாத - அறத்துக்கு மாறுபடாத. ஓதுவி-கற்பிப்பாயாக.
வல்லையேல். வல்லவனாயின் என்றதால்  அத்தகையவல்லமை
உனக்கு இல்லை என்பது குறித்து நின்றது.
 

(28)
 

6217.

' "ஆரைச் சொல்லுவது, அந்தணர் அரு மறை

அறிந்தோர்,

ஓரச் சொல்லுவது எப் பொருள், உபநிடதங்கள்,

தீரச் சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும்

பேரைச் சொல்லுவது அல்லது, பிறிதும் ஒன்று

உளதோ?