பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 97

அந்தணர் அருமறை - வேதம் வல்ல அந்தணர்களின்  அரிய
வேதங்கள் எல்லாம்; ஆரைச் சொல்லுவது - யாரைச் சிறப்பித்துப்
பேசுகிறதோ -அறிந்தோர் -  கற்றுணர்ந்த  சான்றோர்கள்;  ஓரச்
சொல்லுவது எப்பொருள்
- ஓர்ந்து கூறுவது எந்தப் பொருளையோ
-உபநிடதங்கள்  தீரச்  சொல்பொருள்  -   அதுவே   எல்லா
உபநிடதங்களும்   முடிந்த  முடிவாகக்   கூறும்  பொருள் ஆகும்;
தேவரும்   முனிவரும் 
-  அதனை   உணர்ந்த   தேவர்களும்
முனிவர்களும்; செப்பும் பேரைச்  சொல்லுவதல்லது  -  கூறும்
அந்த திருப்பெயரைக் கூறுவதைத்  தவிர;பிறிதும் ஒன்று உளதோ
- வேறு ஒன்றும் உள்ளதோ?
 

ஓரச் சொல்லுதல் - ஆய்ந்தறியும்படி கூறுதல். தீரச் சொல்லுதல்
- முடிந்த   முடிவாகக்   கூறுதல்.   யாரை   என்பது  ஆரை என
வழங்குவது உலக (மரூஉ) வழக்கு.   பெயர்   என்பதே  பேர் என 
வழங்குவதும் மரூஉ வழக்கே
 

(29)
 

6218.

' "வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய்

உணர்ந்த

போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,

சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு

சமைந்தேன்;

ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ?

 

'வேதத்தானும் - வேதங்களை எல்லாம் கற்று அறிவதாலும்;
நல்வேள்வியினானும் - நன்மை  தரும் வேள்விகளைச் செய்து
முடிப்பதனாலும்;மெய் உணர்ந்த போதத்தானும் - உண்மைப்
பொருளை     உணர்ந்து     அறிந்த    மெய்ஞ்ஞானத்தாலும்;
அப்புறத்துள எப்பொருளானும்
- இவைகளுக்கு அப்பாலுள்ள
கர்மம், பக்தி,  யோகம் போன்றவற்றினாலும்;சாதிப்பார் பெறும்
பெரும்பதம்
-   சாதித்த   மேலோர் அடையும் பெரிய தொரு
பேற்றினை;தலைக் கொண்டு சமைந்தேன் - பரமன் நாமத்தைக்
கூறுதலை   மேற் கொண்டு அடைந்துய்ந்தேன்; ஓதி, கேட்பது
பரம் பொருள்
- ஓதியும், ஓதக் கேட்கும் பயன் அடைவதற்குரிய
மேலான பொருள்; இன்னம் ஒன்று உளதோ -  இதைவிடவும்
நன்மை பயப்பது வேறு ஒன்று உள்ளதோ?