நற்பலன்தருவது வேள்வியாதலின் 'நல்வேள்வி' என்றார். சாதித்தல்; சித்தியடைதல். பெரும்பதம். பெரும்பேறு. தலைக் கொண்டு; மேற்கொண்டு. பரம்பொருள்; மேலான பொருள். |
(30) |
| 6219. | ' "காடு பற்றியும், கன வரை பற்றியும், கலைத் |
| தோல் |
| மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால் |
| வீடு பெற்றவர், 'பெற்றதின் விழுமிது' என்று |
| உரைக்கும் |
| மாடு பெற்றனென்; மற்று, இனி என், பெற வருந்தி? |
| |
காடு பற்றியும்- காட்டை இடமாகக் கொண்டும்; கன வரை பற்றியும் - பெரிய மலையை இடமாகக் கொண்டும்; கலைத்தோல் மூடி முற்றியும் - மான் தோலைப் போர்த்தும் உடுத்தியும்; முண்டித்தும் நீட்டியும் - தலையை மொட்டையடித்தும், முடியை வளர்த்தும்; முறையால் வீடு பெற்றவர் - தமக்குரிய முறையானதவ ஒழுக்கத்தால் வீடு பேற்றை அடைந்தவர்கள் எல்லாம்; 'பெற்றதின் விழுமிது' என்றுரைக்கும் - பெற்ற பேற்றைவிட மேலானது என்று கூறுகின்ற; மாடு பெற்றனன் - பெரிய செல்வத்தைப் பெற்றுள்ளேன்;மற்று இனி வருந்தி என் பெற - உடலை வருத்தி நான் இனிப் பெறுவதற்கு என்ன இருக்கிறது? |
கனவரை - பெரிய மலை. முற்றி மூடி - முழுமையாகப் போர்த்து 'மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்ற குறள் நினைதற்குரியது. முறை - அவரவர்க்குரியதவ ஒழுக்கம். |
(31) |
| 6220. | ' "செவிகளால் பல கேட்டிலர்ஆயினும், தேவர்க்கு |
| அவி கொள் நான்மறை அகப் பொருள் புறப்பொருள் |
| அறிவார்; |
| கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்;- |
| காலால் |
| புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் |
| புக்கார். |
| |
காலால்புவிகொள் நாயகற்கு- தன் திருப்பாதங்களால் (அளந்து) உலகத்தைத் தனக்குரியதாக்கிக் கொண்ட தலைவனாகிய திருமாலுக்கு; அடியவர்க்கு அடிமையின் புக்கார் - அடியார்கள் எவரோ அவர்களுக்கு அடிமைபூண்டவர்கள்; |