பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 101

6223.

' "எந்தை ! கேள்: எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும்

இயம்பச்

சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி,

'முந்தையே நினைந்து, என் பொருள் முற்றும்?' என்று

உரைத்து, உன்

மைந்தன் ஓதிலன், வேதம்" என்று உரைத்தனன்,

வணங்கி.

 

வணங்கி -   இரணியனை   அடைந்த   மறையவன் அவனை
வணங்கி;  எந்தை  கேள் - எனக்குத் தந்தை போன்ற தலைவனே
நான்  உரைப்பதைக் கேட்பாயாக;  உன் மைந்தன் - உனது மகன்;
எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும்- எனக்கு இந்தப் பிறவியிலோ
அடுத்த பிறவியிலோ;இயம்பச் சிந்தையால் இறை நினைத்தற்கும்
- கூறுவதற்கும் ஒரு சிறிது  மனத்தில்  நினைப்பதற்கும்;  அடாதன
செப்பி
- தகாதனவற்றைக்  கூறி;  'முந்தையே   நினைந்து என்
பொருள் முற்றும்'
- முன்பே நினைத்து, எனக்கு வேதப் பொருள்
அத்தனையும் முற்றுப் பெற்றுள்ளது;என்று உரைத்து - என்று கூறி;
வேதம் ஓதிலன்
-  நான்  கற்றுத்  தரத்  தொடங்கிய வேதத்தை
ஓதாதவனானான்;  என்று  உரைத்தனன் - என்று, இரணியனிடம்
கூறினான்.
 

(35)
 

இரணியன் மறையவன் உரையாடல்
 

6224.

'அன்ன கேட்டு, அவன், "அந்தண! அந்தணர்க்கு

அடாத,

முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத,

தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது,

என்ன சொல், அவன் இயம்பியது? இயம்புதி"

என்றான்.

 

அன்னகேட்டு, அவன் - மறையவன் கூறிய அவற்றைக் கேட்டு,
இரணியன்   மறையவனை   நோக்கி;   அந்தண  - அந்தணனே;
அந்தணர்க்கு  அடாத -   மறையவர்கள்   கேட்கத்   தகாததும்;
முன்னர்  யாவரும்   மொழிதரும் முறைமையில்படாத- முன்பு
யாரும்  கூறுதற்குரிய முறைமையில் படாததும்;தன்னது உள் உறும்
உணர்ச்சியால்
- தனது உள்ளத்தே முகிழ்த்த உள்ளுணர்ச்சியினால்;
புதுவது தந்தது
- புதியதாகக் கூறியதுமான; என்ன சொல் அவன்