பக்கம் எண் :

102யுத்த காண்டம் 

இயம்பியது - என்ன சொல் அவன்   சொன்னது?   இயம்புதி
என்றான்
- நீ கூறுவாயாக என்றான்.
 

அன்ன - மறையவன் கூறிய அந்தச் சொற்கள். அடாத - தகாத 
முறைமையில் படாத - முறையோடு பொருந்தாத.
 

(36)
  

6225.

'அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி,

சிரதலம் கரம் சேர்த்திடா, "செவித் தொளை சேர்ந்த

உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின்,

உரவோய்!

நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்' என

நவின்றான்.

 

அரசன் அன்னவை உரை  செய -   அரசனாகிய இரணியன்
அவ்வாறு  கூறினானாக;  மறையவன் அஞ்சி - அந்தணன் பயந்து;
சிரதலம்  கரம்  சேர்த்திடா 
-   தலைமீது  கரங்களைக் கூப்பி
வணங்கி;  'செவித்  தொளை சேர்ந்த -  காதுத் தொளைகளிலே
புகுந்த;  உரகம்   அன்ன  சொல் - பாம்புக் கொப்பான அந்தச்
சொல்லை; யான்  உனக்கு  உரை  செயின் -  நான்  உனக்குச் 
சொல்லு   வேனாயின்; உரவோய் - வலிமை மிக்கவனே;   நரகம்
எய்துவென்
- நான் நரகத்தை அடைவேன்;நாவும் வெந்து உகும்
- எனது நா வெந்து அழியும்; என நவின்றான் - என்று கூறினான்.
 

'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதற்
கொப்ப   மறையவன்  நடத்தை அமைந்தது. பிரகலாதன்   ஓதிய
திருவெட்டெழுத்தைத் தான் சொன்னால் நரகம் கிடைக்கும், நாக்கு
வெந்துபோகும் என்னும் நிலையை உன்னுக.
 

(37)
  

இரணியன் மைந்தனை அழைத்து நிகழ்ந்தன கேட்டல்
  

6226.

' "கொணர்க என் மைந்தனை, வல் விரைந்து"

என்றனன், கொடியோன்;

உணர்வு இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி,

கணனின் எய்தினர், "பணி" என, தாதையைக்

கண்டான்-

துணை இலான்தனைத் துணை என உடையவன்

தொழுதான்.