பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 103

கொடியோன் - மிகக் கொடியவனாகிய இரணியன்;கொணர்க
என்மைந்தனை   வல்  விரைந்து என்றனன்
- என் மகனை,
மிகவிரைவில்   இங்கு அழைத்து வாருங்கள் என ஏவலர்களுக்கு
உத்தரவிட்டான்;  உணர்வு   இல்    நெஞ்சினன்   ஏவலர்
கடிதினின்  ஓடி
-  நல்லுணர்வு   இல்லாத   நெஞ்சினனாகிய
இரணியனின்   ஏவலர்கள்   விரைவாகச்   சென்று;  கணனின்
எய்தினர்
- ஒரு கணப் பொழுதில் பிரகலாதனை அடைந்தார்கள்;
பணி என
- அரசனது 'கட்டளை' என்று கூற; துணை இலான்
தனை
- தனக்குவமையும் ஒப்பும் இல்லாதவனான பரந்தாமனை;
துணை என  உடையவன்
-  தனக்கு துணை உடையவனான
பிரகலாதன்; தாதையைக்  கண்டான்  தொழுதான்-  தனது
தந்தையான இரணியனைக் கண்டு வணங்கினான்.
 

உணர்வு - நல்ல   அறிவு. வல்விரைந்து - மிக விரைவாக.
கணனின் -  கணப்     பொழுதில்.   'துணையிலான்' என்றது
தனக்குவமையில்லாத   பரமனை.   'துணையென உடையவன்'
திருமாலையே   உயிர்த்துணை எனக்  கொண்ட பிரகலாதனை.
செயல்களின்   விரைவு   பாடலில்  புலப்படுகின்றது. ஏவலர்
கடமைப்பாங்கும்   பிரகலாதனின்   பணிவும்    தெள்ளிதின்
உணர்த்தப்பட்டன.
 

(38)
  

6227.

'தொழுத மைந்தனை, சுடர் மணி மார்பிடைச்

சுண்ணம்

எழுத, அன்பினின் இறுகுறத் தழுவி, மாடு இருத்தி,

முழுதும் நோக்கி, "நீ, வேதியன் கேட்கிலன் முனிய,

பழுது சொல்லியது என்? அது பகருதி" என்றான்.

 

தொழுத மைந்தனை - (தனது பாதங்களில் வீழ்ந்து) வணங்கிய
மகனை;   சுடர்மணி   மார்பிடை -   ஒளிமிக்க தனது மார்பிலே
பூசப்பட்ட;சுண்ணம் எழுத -வாசனைப் பொடிபிரகலாதன் உடலிலே
படும்படி;அன்பினில் இறுகுறத் தழுவி -   அன்போடு,  இறுகத்
தழுவி;   மாடு  இருத்தி -  தனக்குப்  பக்கத்திலே    இருக்கச்
செய்து;முழுதும் நோக்கி - மகனைப் பாதாதிகேசமாக  முழுவதும்
பார்த்து;  நீ  வேதியன்  கேட்கிலன்  முனிய -  மகனே!  நீ
ஆசிரியன்  கேட்க இயலாதவனாக கோபம் கொள்ளும்படி; பழுது
சொல்லியது என்?
- தவறுபடக் கூறியது என்ன?; அது பகருதி
என்றான்
- அதைக் கூறுவாயாக என்றான்.