பக்கம் எண் :

104யுத்த காண்டம் 

சுடர்   மணி   மார்பு   -   இரணியன் பொன் நிறமுடையவன்.
ஒளிமிக்க ஆபரணங்களும் அணிந்துள்ளான். எனவே, அவன் மார்பு
ஒளியுடைய மார்பு எனப்பட்டது. எழுத - பூச.
 

(39)
 

பிரகலாதன் உரையின் சிறப்புக் கூற
இரணியன் அதனைச் சொல்ல வேண்டல்
 

6228.

' "சுருதி ஆதியில் தொடங்குறும் எல்லையில்

சொன்ன

ஒருவன், யாவர்க்கும் நாயகன், திருப் பெயர் உணரக்

கருதக் கேட்டிடக் கட்டுரைத்து, இடர்க் கடல் கடக்க

உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல்" என

உரைத்தான்.

 

சுருதி ஆதியில் தொடங்குறும் எல்லையில் - வேதம் முதலிலே
ஆரம்பிக்கும் சமயத்தில்; சொன்ன ஒருவன் யாவர்க்கும் நாயகன் -
சொன்ன ஒப்பற்ற ஒருவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும் ஆகிய திருமாலுடைய;திருப்பெயர் - சிறந்த  திரு  நாமமானது;உணர, கருத,
கேட்டிட
- அறியவும், நினைக்கவும், கேட்கவும் செய்து;கட்டுரைத்து -
நாளும்இடை விடாது சொல்லி;இடர்க் கடல் கடக்க உரிய - துன்பக்
கடலில்  இருந்து கடந்து கரையேற உரியதாகும்;மற்று இதின் - வேறு
இதை  விடவும்;  நல்லது   ஒன்று  இல் -  நமக்கு நன்மைதருவது
ஒன்றில்லை; என உரைத்தான் - என்று பிரகலாதன் கூறினான்.
 

(40)
 

6229.

'தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய, தீயோன்

"தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்;

ஆவது ஆகுக; அன்று எனின், அறிகுவம்" என்றே,

"யாவது, அவ் உரை? இயம்புதி, இயம்புதி!"

என்றான்.

 

தேவர் செய்கையன்- (அசுரனான இரணியனுக்கு மகனாகப்
பிறந்தும்)     தேவர்களைப்   போன்ற   சிறந்த   ஒழுக்கத்தை
உடையவனாகிய பிரகலாதன்; அங்ஙனம் உரை செய- அவ்வாறு
கூற;  தீயோன் -  கொடிய  இயல்புடைய  இரணியன்; தா இல்
வேதியன்
- குற்றமில்லாத அந்தணனாகிய ஆசிரியன்; தக்கதே
உரை   செயத்தக்கான் 
-   தகுதியானவைகளையே   கூறத்
தகுந்தவனாவான்; ஆவது ஆகுக - நடக்கவேண்டியது