பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 105

நடக்கட்டும்;   அன்று   எனின்   அறிகுவம்- இவன் கூறும்
சொல்நமக்கு நன்மை தராதது என்றாலும்   அதை   அறிவோம்;
என்றே - என்றெண்ணியவனாக;யாவது அவ்வுரை இயம்புதி
இயம்புதி என்றான்
- நீ சொல்லும் அந்தப் பெயர் எது கூறுக
கூறுக என்றான்.
 

'இயம்புதி இயம்புதி' விரைவு பற்றி வந்த அடுக்கு. தேவர்
செய்கையன் - அரக்கர் குலத்தினன் ஆயினும் தேவர்களைப்
போன்ற நடத்தை உடையவன்   என்பது   கருத்து; நீதியால்
வந்ததொரு நெடுந்தரும் நெறியல்லால்  சாதியால்  வந்த சிறு
நெறியறியான்' என வீடணனைப் பற்றி உரைப்பது   நினைவு
கூரத்தக்கது.(7625)
 

ஆசிரியன்  சரியாகத்தான் சொல்லியிருக்கிறான் என்று
இரணியன் கருதியதை 'தக்கதே உரைசெயத்தக்கான்" என்ற
தொடர் உணர்த்துகிறது.
 

(41)
  

எட்டெழுத்தின் பெருமையைப் பிரகலாதன் இயம்புதல்
  

6230.

' "காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,

சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த

ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்

நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய!

 

காமம் யாவையும் தருவதும் - நாம் விரும்பும் நற்பேறுகள்
எல்லாவற்றையும்    தரவல்லதும்;   அப்பதம்   கடந்தால் -
(விரும்பும் நிலையான) அப்பதவிகளைக் கடந்தபின்பு ; சேமவீடு
உறச் செய்வதும்
- என்றும் அழியாத நிலைத்த தன்மையுடைய
பாதுகாப்புதவும் வீட்டின்பத்தைத் தருவதும்; செந்தழல் முகந்த
-   செம்மையான   தீயால்   முகந்து    கொள்ளப்படும்;ஓம
வேள்வியின் உறுபதம்
- யாகத்தினால்  அடையும்   துறக்கம்
முதலிய பதவிகளிலே;உய்ப்பதும் - நம்மைச் செலுத்துவதும்;
ஒருவன் நாமம் - ஒப்பற்ற ஒருவனாகிய பரமனது திருநாமமே;
அன்னது கேள் நமோ நாராயணாய- அதனைக் கேட்பாயாக
ஓம்நமோ நாராயணாய நம என்பது அது.
 

காமம் - விரும்பும்   நற்பேறுகள்.   சேமம் - பாதுகாப்பு.
சேமவீடு - பரமபதம். "நடந்த நம்பி நாமம் சொல்லில்  நமோ
நாராயணமே"   எனவெல்லாம்   அருளிச்  செயல் கூறுவதை
நினைவு  கூர்வோமாக.  இம்மை,   மறுமை   இன்பங்களைத்
தரவல்லது இத்திரு மந்திரமே என்பது கருத்து.
 

(42)