பக்கம் எண் :

106யுத்த காண்டம் 

6231.

' "மண்ணின்நின்று மேல் மலர் அயன் உலகு உற

வாழும்

எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,

எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.

 

மண்ணின் நின்று - இந்த மண்ணுலகு தொடங்கி; மேல் மலர்
அயன்   உலகு   உற  
-   மேலேயுள்ள   பிரமதேவனுக்குரிய
சத்தியலோகம்  வரை   எங்கும்;  வாழும் எண்இல் பூதங்கள் -
வாழுகின்ற  எண்ணற்ற   உயிரினங்களில்;  நிற்பன   திரிவன -
நிலையியற்    பொருள்,     இ யங்கியற்   பொருள்;  இவற்றின்-
ஆகிய இவ்விரு    வகைப்     பொருள்களின்;   உள்நிறைந்துள
- உள்ளத்தே  நிறைந்திருக்கின்ற;   கரணத்தின்   ஊங்கு  உள
உணர்வும்
- உயிர் உணர்வும் அதைக்கடந்து நிற்கும் மெய்யுணர்வும்
(ஞானம்);    எண்ணுகின்றது    -     நினைந்து   போற்றுவது;
இவ்வெட்டெழுத்தே - இந்த எட்டெழுத்து மந்திரத்தினையேயாம்;
பிறிது இல்லை
- இதுவல்லாத வேறு எதுவும் இல்லை.
 

மேல் மலர் அயன் உலகு - பிரம்ம தேவன் வாழும் சத்திய
லோகம் பூதங்கள் - (பூதங்களின்   கூட்டால் உருவாகும்) உயிர்
வர்க்கம் கரணம் - உள்ளம், உரை, செயல் முதலியன
 

(43)
 

6232.

' "முக் கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்

முதலா,

மக்கள்காறும், இம் மந்திரம் மறந்தவர் மறந்தார்;

புக்குக் காட்டுவது அரிது; இது பொதுவுறக் கண்டார்

ஒக்க நோக்கினர்; அல்லவர் இதன் நிலை உணரார்.

 

முக்கண் தேவனும்- மூன்று கண்களை உடைய சிவ பெருமானும்;
நான்   முகத்து   ஒருவனும் முதலா - நான்கு முகங்களை உடைய
பிரமதேவன் முதலாக;  மக்கள்   காறும்   -  மண்ணுலகில் வாழும்
மக்கள் இறுதியாக;இம்மந்திரம்  மறந்தவர்- இவ்வெட்டு  எழுத்து
மந்திரத்தை மறந்தவர்கள்;மறந்தார் - தாம் அடைய   இருந்த உறுதிப்
பேறுகளை மறந்தவராவார்;புக்குக் காட்டுவது  அரிது இது - இதன்
பொருளை   நுணுக்கமாக   ஆராய்ந்து  அறிவிப்பதென்பது  இயலாத
தொன்று;  பொதுவுறக் கண்டார் -  வேறுபாடின்றி எக்காலத்துக்கும்
பொது  நெறி  நின்று  யோகத்தால்   அறிந்த  மேலோரும்;   ஒக்க
நோக்கினர்
- அவர் வழிநின்று