பக்கம் எண் :

108யுத்த காண்டம் 

6234.

' "உன் உயிர்க்கும், என் உயிர்க்கும், இவ்

உலகத்தினுள்ள

மன்னுயிர்க்கும், ஈது உறுதி என்று உணர்வுற

மதித்துச்

சொன்னது இப் பெயர்" என்றனன், அறிஞரின்

தூயோன்;

மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ

விழித்தான்.

 

அறிஞரில் தூயோன் - அறிஞர்களில் தூய பேரறிவினனாகிய
பிரகலாதன்;  உன் உயிர்க்கும் - உன்னுடைய  உயிருக்கும்; என்
உயிர்க்கும்
-  என்னுடைய   உயிருக்கும்;  இவ்வுலகத்திலுள்ள
மன்னுயிர்க்கும்
-   இவ்வுலகத்தில்   வாழுகின்ற   வேறு  பல
உயிர்களுக்கும்;  ஈது     உறுதி     என்று   -    இதுதான்
உ.றுதிபயப்பதென்று;  உணர்வு   உற மதித்துச்   சொன்னது-
எனதுள்ளத்தே முகிழ்த்த நல்லுணர்வால்  ஆராய்ந்து   கூறியது;
இப்பெயர் - இந்தப் பரமனின் திருப்பெயராகும்;   என்றனன்-
என்று கூறினான்; (அதைக்கேட்ட)   மின்   உயிர்க்கும்   வேல்
இரணியன் -   மின்னலைப்   போல ஒளிரும் வேலை உடைய
இரணியன்;  தழல்  எழ விழித்தான் - (சினத்தால்) கண்களில்
நெருப்பெழ விழித்தான்.
 

'அறிஞரில்   தூயோன்' என்றது பிரகலாதனை. அறிஞரின்
அறிஞன் என்றும்  தூயர் என்பவர் யாரினும் தூயான் என்றும்
முன்னமே (6207) கூறியுள்ளார்.
 

இரணியன் பிரகலாதனை நோக்கிச் சினந்து கூறுதல்
  

6235.

' "இற்றை நாள் வரை, யான் உள நாள் முதல், இப்

பேர்

சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என்

ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப் பெயர் 

உரைத்தார்?

கற்றது ஆரொடு? சொல்லுதி, விரைந்து" எனக்

கனன்றான்.

 

இற்றை நாள் வரை - இந்த நாள் வரையும்; யான் உள
நாள்முதல்
- நான் ஆட்சிக்கு வந்த நாள்முதலாக; இப்பேர்
சொற்ற நாவையும்
- இந்தப் பெயரைச் சொன்ன நாவையும்;
கருதிய