மனத்தையும் - நினைத்த மனத்தையும்;சுடும் என் ஒற்றை ஆணை - சுட்டு அழிக்கும் நிகரற்ற எனது தனியாணை; மற்றுயார் உனக்கு இப்பெயர் உரைத்தார் - இருந்தும், உனக்கு இந்தப் பெயரை யார் சொன்னார்கள்?; கற்றது ஆரோடு - எவரிடம் கற்றறிந்தாய்?;சொல்லுதி விரைந்து - சீக்கிரம் பதில் சொல்; எனக் கனன்றான் - என்று சினந்து கூறினான். |
யான் உள நாள் - தவபலத்தால் நான் ஆட்சி செய்யத் தொடங்கிய நாளிலிருந்து - "இப்பேர்" பிரகலாதன் கூறிய திரு நாமத்தை இன்னதெனச் சொல்லாமல் வெறுப்புத் தோன்ற 'இப்பேர்' என்றான். ஒற்றை ஆணை - ஒப்பற்ற ஆணை (ஏக சக்ராதிபத்யம்) 'மற்று' வினைமாற்றுப் பொருள். கனன்றான் - சினந்து கூறினான். தன் மகன் ஆதலின் குற்றத்தை அவன்மேல் ஏற்றாது பிறர்மேல் ஏற்றி, 'யார் உரைத்தார்', 'கற்றது ஆரொடு' என்று இரணியன் கூறியதாகக் கவிச்சக்கரவர்த்தி உரைத்த நயம் உணர்க. இவ்வாறு பின்னும் வரும் இதுமகாவித்துவான். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(47) |
| 6236. | ' "முனைவர் வானவர் முதலினர், மூன்று உலகத்தும் |
| எனைவர் உள்ளவர், யாவரும், என் இரு கழலே |
| நினைவது; ஓதுவது என் பெயர்; நினக்கு இது நேர |
| அனையர் அஞ்சுவர்; மைந்த ! நீ யாரிடை அறிந்தாய்? |
| |
முனைவர் வானவர் முதலினர் - தேவர்களுக்குத் தலைவர்களான மூவரும் மற்றுமுள்ள தேவர் முதலானோரும்; மூன்று உலகத்தும் எனைவர் உள்ளவர் யாவரும்- இந்த மூன்று உலகங்களிலும் வாழுகின்றவர்களான மற்ற எல்லோரும்; நினைவது என் இரு கழலே - எப்போதும் நினைந்து போற்றுவது எனது இரண்டு பாதங்களையேயாம்; ஓதுவது என்பெயர் - தினமும் ஓதுவதும் எனது பெயரையேயாம்;நினக்கு இது நேர- உனக்கு இந்தப் பெயரை நேர்ந்து சொல்ல;அனையர் அஞ்சுவர் - அந்த மூவரும், தேவரும், பிறகும் அஞ்சுவார்கள்; மைந்த ! நீ யாரிடை அறிந்தாய் - மைந்தனே! நீ இந்தப் பெயரை யாரிடம் அறிந்து கொண்டாய்? |
நேர - உடன்பட்டுக் கூற. முனைவர் - முதல்வர் (அயன், அரி, சிவன் ஆகிய மூவர்). எனைவர் - எத்தனை பேர். |
(48) |