| 6237. | ' "மறம் கொள் வெஞ் செரு மலைகுவான், பல் |
| முறை வந்தான், |
| கறங்கு வெஞ் சிறைக் கலுழன்தன் கடுமையின், |
| கரந்தான்; |
| பிறங்கு தெண் திரைப் பெருங் கடல் புக்கு, இனம் |
| பெயராது, |
| உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு |
| உரைத்தார்? |
| |
மறம்கொள் வெஞ் செரு மலைகுவான் - வீரம் மிக்க கொடிய போரை என்னுடன் செய்வதற்காக; பல்முறைவந்தான் - (நீ கூறிய அத்திருமால்) பலமுறை வந்தான்;கறங்கு வெஞ்சிறை - (எனக்குத், தோற்று) சுழன்று பறக்கின்ற வெம்மையான இறகுகளை உடைய;கலுழன் தன் கடுமையின் கரந்தான் - வாகனமாகிய கருடனது விரைந்து செல்லும் வேகத்தால் மறைந்தான்; பிறங்கு தெண் திரை - பெருகிவரும் தெளிந்த அலைகளைஉடைய; பெருங்கடல் புக்கு - பெரிய பாற்கடலிலே புகுந்து; இனம் பெயராது - இன்னும் அந்த இடத்தை விட்டு இடம் பெயராது; உறங்குவான் பெயர் - உறங்குபவனாகிய திருமாலின் பெயர்; உறுதி என்று - உறுதிப் பேறுதரவல்லது என்று; ஆர் உனக்கு உரைத்தார் - யார் உனக்குச் சொன்னார்கள்? |
வெஞ்செரு - கொடியபோர். மலைகுவான் - போரிடுதற்காக (வானீற்று வினை எச்சம்). கறங்கு - காற்றாடி போலச் சுழன்று பறத்தல். கலுழன் - கருடன். இனம் - இன்னம் என்பதன் இடைக்குறை. |
(49)
|
| 6238. | ' "பரவை நுண் மணல் எண்ணினும், எண்ண |
| அரும் பரப்பின் |
| குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொலக் |
| குறைந்தார்; |
| அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு |
| விரவு நன்மை என் ? துன்மதி ! விளம்பு" என |
| வெகுண்டான். |
| |
துன்மதி - கெடுமதி கொண்டவனே ! பரவை நுண்மணல் எண்ணினும் - கடற்கரையில் உள்ள நுண்ணிய மணலை எண்ணினாலும்; எண்ணஅரும் பரப்பின் - எண்ணுதற்கரிய பரப்பினராக;குரவர் நம் குலத்துள்ளவர் - நம் குலத்து |