பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 111

முன்னோர்களாக வாழ்ந்த பலரும்;அவன் கொலக் குறைந்தார்
- அத்திருமால்   கொல்ல   அழிந்து   அளவில்  குறைந்தனர்;
அரவின்  நாமத்தை - தனக்குப் பகையான பாம்பின் பெயரை;
எலி இருந்து ஓதினால்   -   எலி   அமைதியாய்   இருந்து
ஓதுவதால்;  அதற்கு  விரவும் நன்மை என் - அந்த எலிக்கு
வந்து சேரும் நன்மை என்ன?;'விளம்பு' என வெகுண்டான் -
சொல்லு எனக்கோபித்துக் கூறினான்.
 

பரவை - கடல். குரவர் - முன்னோர். 'அரவின் நாமத்தை
எலி' என்ற உவமையின்மூலம் இரணியன் நாராயணனை அரவு
என்றும்,   தம்மை  எலி என்றும் உவமைப்படுத்தி திருமாலின்
வலிமையை உறுதிப்படுத்தியது போல் கூறினானாம்.
 

(50)
 

6239.

' "வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்

அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை, ஏனம் ஒன்று

ஆகி,

எயிற்றினால் எறிந்து, இன் உயிர் உண்டவன் நாமம்

பயிற்றவோ, நினைப் பயந்தது நான்?" எனப்

பகர்ந்தான்.

 

வயிற்றினுள் - தனது   வயிற்றுக்குள்ளே;உலகு  ஏழொடு
ஏழையும் வைக்கும்
- கீழுலகம்  ஏழு, மேலுலகம் ஏழு ஆகிய
பதினான்கு உலகங்களையும் வைக்கும்;அயிர்ப்பு இல் ஆற்றல்-
ஐயத்துக்கிடமில்லாத     வலிமை   உடைய; என்  அனுசனை-
எனதுதம்பியான இரணியாட்சனை; ஏனம் ஒன்று ஆகி - பன்றி
வடிவம் எடுத்து வந்து;எயிற்றினால்  எறிந்து - தந்தங்களால்
குத்தி;இன்உயிர் உண்டவன் நாமம் - அவனது இனிய உயிரை
உண்டவனான    அத்திருமாலின்     பெயரை;   பயிற்றவோ
நினைப்பயந்தது நான்?
- சொல்லுவதற்காக வா உன்னை நான்
மகனாகப் பெற்றேன்?; எனப்பகர்ந்தான் - என்று கூறினான்.
 

அனுசன் - தம்பி பயிற்றுதல் - பலமுறை கூறுதல்.
 

"ஏனம் ஒன்றென எழுந்து வந்து எம் ஐயன்

ஆவி உண்டவனை இன்றுநீ

மானமின்றி எதிர் ஓதவோ உனை

வளர்த்த தென்றிவை கிளர்த்தியே"

 

என்ற இரணியவதைப் பரணி (335) ஒப்புநோக்கத்தக்கது.
  

(51)