பக்கம் எண் :

112யுத்த காண்டம் 

6240.

' "ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும்

முதல்வன்,

தருதல், காத்து, அவை தவிர்த்தல் என்று இவை

செயத் தக்கோன்,

கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி,

திருவிலீ! மற்று இது எம் மறைப் பொருள் எனத்

தெரிந்தாய்.

 

திருஇலீ  -   திருவில்லாதவனே (நல்ல பேறு இல்லாதவனே)!;
ஒருவன் -     ஒப்பற்ற    ஒருவனாகிய    நான்;   யாவர்க்கும்
எவற்றிற்கும் 
   -   இவ்வுலகில்     வாழும்   எல்லோருக்கும்
எல்லாவற்றுக்கும்;  உலகிற்கும்  முதல்வன் - இந்த உலகுக்கும்
முதல்வனாயுள்ளேன்;  தருதல்,   காத்தல்,  அவை தவிர்த்தல்
என்று   இவை   செயத்  தக்கோன்
- எல்லா உயிர்களையும்
படைத்தல்,   காத்தல்,   அழித்தல்   என்று   கூறப்படும்   முத் 
தொழிலையும் செய்யத்தக்கவன் நானே;கருமத்தால்  அன்றி -
(இதில் நேரில் காணும்)   காட்சி   அளவையினால்   அல்லாது;
காரணத்தால்   உள்ள   காட்சி -  கருதுதல் அளவையாகிய
அனுமானப்பிரமாண உணர்வால்;மற்று இது - அறிந்து உணரும்
இதனை;  எம்மறைப்   பொருள் எனத்  தெரிந்தாய் - எந்த
வேதத்தில் கூறப்படும் பொருள் என்று தெரிந்து கொண்டாய்.
 

தனக்குப் பின் தனது செல்வமனைத்தையும் துய்க்க வேண்டிய
மகன் வீணாகப் பகைவன் பெயரைக் கூறி, செல்வத்தை  இழக்கப்
போகிறானே   என்பதை    உணர்த்துவான்   'திருவிலீ'   எனப்
பிரகலாதனை அழைத்தான் என்க. கருமம் - காட்சி   காரணம் -
அநுமானம் (கருதுதல்)
 

(52)
 

6241.

' "ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர்

உலகின்;

வேதம் எங்கனம், அங்கனம் அவை சொன்ன

விதியால்,

கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்;

குறித்துத்

தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின்.

 

பேருலகின் - மிகப் பெரிய  இந்த   உலகத்திலே;   ஆதி
அந்தங்கள்
- வேதத்தின் ஆரம்பமுதல்  முடிவு வரை கூறுவது;
இதனின் மற்று இல்லை - இதைவிட   வேறு   எதுவுமில்லை;
வேதம்