பக்கம் எண் :

114யுத்த காண்டம் 

தலைவர்கள் அல்லர் என்பான்'   செய்த மாதவம்  உடைமையின்
அரி   அயன் சிவன்   என்றெய்தினார்" என்றான் என்பதும் ஒரு
பொருளாகும்.
  

(54)
 

6243.

' "வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி,      
கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர் 

பகையைத்

தாழ்வியாதன செய்யும்' என்று; அனையவர்தம்பால்

வாழ்வு யாது ? அயல் எவ் வழிப் புறங்கொண்டு

வாழ்வார் ?

 

வேள்வி ஆதிய- புனிதமான  வேள்விகள் முதலானவையும்;
புண்ணியத்தவத்தொடும் விலக்கி - புண்ணியச்  செயலானதவம்
புரிதலையும் பிறர்  செய்யாதபடி   விலக்கி;   கேள்வியாவையும்
தவிர்த்தனென்   -  நல்ல   நூற்   கேள்வி   முதலியவற்றையும்
நிகழாதபடி நான் தவிர்த்து விட்டேன்; இவை கிளர் பகையை -
வேள்வி முதலான இவையெல்லாம் பொங்கி   எழும்   பகையை;
தாழ்வியாதன செய்யும்-  தாழ்ந்து  பணியாதவாறு   செய்யும்;
என்று   -   என்பதால்   (எவரும்  தவம் முதலியன செய்யாது
தவிர்த்தேன்);   அனையவர்   தம்பால் வாழ்வுயாது- அயன்
முதலானோர்க்கு (எனது ஆட்சியில்) அமைந்த நல்வாழ்வு யாது?;
அயல் எவ்வழி - வேறு எந்த விதத்திலே (அவர்கள்   எனக்கு
மாறாக); புறங் கொண்டுவாழ்வார்- புறத்தே   துணை   பெற்று
வாழ்வர்?
 

வேள்வி ஆகிய - வேள்வி முதலானவை. தவிர்த்தனென் -
விலக்கினேன். புறம் கொண்டு -  புறத்தே துணையைப் பெற்று.
அயல் -   வேறாக.   கேள்வி:   வேதம்   முதலியவைகளைக்
கேட்டல்.
   

(55)
 

6244.

' "பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்;

பெயர்த்தும்.

'ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை;

முனிவன்

யாது சொல்லினன், அவை அவை இதம் என 

எண்ணி,

ஓதி; போதி' என்று உரைத்தனன்-உலகு எலாம்

உயர்ந்தோன்.