பேதைப் பிள்ளைநீ - நீ அறிவு நிரம்பப் பெறாத சிறுவன்; பிழைத்தது பொறுத்தனன் - செய்த பிழையைப் பொறுத்தேன்; பெயர்த்தும் ஏது இல்வார்த்தைகள் இனையன இயம்பலை- மறுபடியும் பகைவரைப் புகழ்ந்து பேசும் சொற்களான இவை போன்றவற்றைச் சொல்லாதே; முனிவன் யாது சொல்லினன்- ஆசிரியனாகிய முனிவன் என்ன சொல்லித் தருகிறானோ; அவை அவை இதம் என எண்ணி- அவையே நமக்கு நன்மை பயப்பன என நினைத்து; ஓதி போதி என்று- (ஆசிரியனுடன்) சென்று, கற்கத் தொடங்குவாயாக என்று; உலகு எலாம் உயர்ந்தோன் உணர்த்தினன்- எல்லா உலகங்களிலும் மேலாண்மை செலுத்தும் இரணியன் கூறினான். |
உலகெலாம் உயர்ந்தோன் - இரணியன் உலகெங்கும் புகழ் உயர்ந்து விளங்குபவன் என்பது பொருள். பிழைத்தது - தவறு செய்தது. முனிவன் -பாடம் கற்பிக்கவந்த அந்தணன். இதம் - நன்மை |
(56) |
பிரகலாதன் அறிவுரை |
கலிவிருத்தம் |
6245. | ' "உரை உளது உணர்த்துவது; உணர்ந்து |
| கோடியேல்,- |
| விரை உள அலங்கலாய் ! - வேத வேள்வியின் |
| கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின் |
| பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்: |
|
விரை உள அலங்கலாய் - மணம் கமழும் மாலையணிந்தவனே; உரை உளது உணர்த்துவது- உனக்கு நான் உணர்த்தும் வார்த்தை ஒன்று உள்ளது; உணர்ந்து கோடியேல் - நான் கூறுவதை உணர்ந்து கொள்வாயேல் (கூறுவேன்); வேத வேள்வியின் கரை உளது - (என்உரை) வேத ஞானத்துக்கும் வேள்வியின் பலனுக்கும் முடிவிடமாயுள்ளது; யாவரும் கற்கும் கல்வியின் பிரை உளது- எல்லோரும் கற்கின்ற கல்வியாகிய பாலுக்கு பிரை போன்ற நிறை உள்ளது; என்பது மைந்தன் பேசினான்- என்பன போன்றவைகளை மகனாகிய பிரகலாதன் கூறினான். |
விரை - மணம். அலங்கல் - மாலை. பிரை - மோர்த்துளி. பாலை உறைய வைக்கும் பிரை போல யாவரும் கற்கும் கல்வியைச் செறிய வைக்கும் உரை உளது. எனது உரையான எட்டெழுத்து மந்திரம் வேத |