பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 119

கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் ? மெய்ம்மை கண்டிலார்.
 

  

அளவை -   பொருள்களை    அளந்து    துணிவதற்குரிய
அடிப்படைப்  பிரமாணங்கள். உளவை - உள்ளவரை. 'சிந்தையும்
மொழியும்  செல்லா நிலைமைத்து" (திருக்குறள் - உரைப்பாயிரம்)
எனப்பரிமேலழகரும்,   "மொழியைக்  கடக்கும் பெரும்புகழான்"
எனத் திருவரங்கத்  தமுதனாரும்   (இராமானுச   நூற்றந்தாதி 7)
கூறியவை   ஒப்பு   நோக்கத்   தக்கன.  கனவு   இங்கு மாயம்.
பரமனின் திறங்களை   இக்காண்டத்தில்,  நாகபாசப்  படலத்தில்
கருடன் துதியாக வரும் பாடல்களில் (8252 8262)  அற்புதமாகக்
கம்பர் விளக்கியுள்ளார்.
 

(62)
 

6251.' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு, 
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை

  

தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ? 
 

மூவகை   உலகும் ஆய் - மேல், கீழ், இடை  என்ற  மூன்று
வகையான உலகங்களும்தான் ஒருவனே ஆகி; குணங்கள் மூன்றும்
ஆய்
-  சத்துவம், இராஜசம்,  தாமசம்  என்னும்  மூன்று வகையான
குணங்களாகவும் ஆகி; யாவையும்  எவரும்   ஆய் -   உலகப்
பொருள்கள் எல்லாமும் எல்லோரும்  தானே   ஆகி;   எண்ணில்
வேறுபட்டு
- எண்ணற்ற வேறுபாடுகளுடன் தோன்றியும்;  ஓவலில்
ஒரு நிலை ஒருவன்
- நீங்குதலில்லாத  ஒரே  நிலையை  உடைய
ஒருவன்(இறைவன்);   செய்வினை  -  செய்தருளும்   செயல்கள்;
தேவரும் முனிவரும் உணர  -   தேவர்களும்,   முனிவர்களும்
உணருமாறு; தேயுமோ- அளவில் சுருங்கியதாய் விடுமோ? ஆகாது.