இட்டவை - உயிர்கள் செய்து வைத்தனவாகும்; (அவற்றுள்) ஒரு வினை ஒரு பயன் அன்றி- ஒரு வினை ஒரு பயனைத் தருவதல்லது; உய்க்குமோ- வேறு பயன்களைத் தரவல்லவையோ; கருதின கருதின காட்டுகின்றது- அடியார்கள் விரும்பிய விரும்பிய பலன்களைத் தரவல்லது; தருபரன் அருள்- எல்லாம் தரவல்ல இறைவன் திருவருளே; இனிச் சான்று வேண்டுமோ - இனி இதற்கு வேறு சாட்சியும் வேண்டுமோ ? |
'வேள்வியும் தவமுமாகிய நல்வினை இயற்றி உலக முதல்வனாக இருக்கிறேன்' என்று கூறிய இரணியனுக்கு, செய்யும் நல்வினையோ தீவினையோ தாமே பயன்தரவல்லன அல்ல. அவை உயிரற்ற சடப் பொருள்தானே எவ்வாறு பலன் தரும்; அடியார் கருதிய அத்தனைப் பயன்களையும் தரவல்லது இறைவன் திருவருளே என்றுணர்க என்றான் பிரகலாதன். உய்க்குமோ - செலுத்துமோ |
(67) |
6256. | ' "ஓர் ஆவுதி, கடைமுறை வேள்வி ஓம்புவார், |
| அரா-அணை அமலனுக்கு அளிப்பரேல்; அது |
| சராசரம் அனைத்தினும் சாரும் - என்பது |
| பராவ அரு மறைப் பொருள்; பயனும் அன்னதால். |
| |
வேள்வி ஓம்புவார் கடைமுறை- வேத வேள்விகளைச் செய்து முடிப்பவர்கள் வேள்வியின் முடிவில்; ஒரு ஆவுதி - ஓர் அவியுணவினை; அராஅணை - பாம்பணையில் அறிதுயில் அமர்ந்திருக்கும்; அமலனுக்கு அளிப்பரேல் - திருமாலுக்குப் படைப்பாராயின்; அது சராசரம் அனைத்திலும் சாரும்- அந்த அவியுணவு உலகில் உள்ள சரம், அசரம் ஆகிய எல்லாவற்றையும் அடையும்; என்பது பராவ அரும்மறைப் பொருள் - என்பது பரவுதற்கு அரிய பெருமைமிக்க 'வேதங்கள் கூறும் பொருளாகும்; பயனும் அன்னதால்- அவியுணவே அல்லாது அந்த வேள்வியின் பயனும் அத்தன்மைத்தே யாகும். |
அமலன் - குற்றமற்றவன் "வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான்" என்ற பெரியதிருமொழி (நாலாயிர.1786) ஒப்பு நோக்கத்தக்கது. |
(68) |
6257. | ' "பகுதியின் உட் பயன் பயந்தது; அன்னதின் |
| விகுதியின் மிகுதிகள் எவையும், மேலவர் |
| வகுதியின் வசத்தன; வரவு போக்கது; |
| புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ ? |