பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 123

 

பகுதி -   மூலப்  பிரகிருதி;   அழிவில்லாதது,   அளவற்றது;
முக்குணமுடையது;  உலகுக்கு   முதற்காரணமானது;  தோற்றமும்
அழிவும்   இல்லாதது. பரமன்  திருவிளையாட்டுக்குக் கருவியாய்
விளங்குவது  மூலப்   பிரகிருதி. இதனைப்   பரிபாடல் தொண்டு
என்னும்.  இந்த  மூலப்பிரகிருதியிலிருந்து   "மான்"   முதலான
தத்துவங்கள் தோன்றும் இதிலிருந்து பலவாய் விரிந்து தோன்றும்
பொருள்கள் 'விகுதி' எனப்படும். விகுதி-வகை மூலப்பகுதியாகிய
தத்துவம்   உலகுக்குக்   காரணமாய்   -   தன்னில்   விரிந்த
இருபத்துநான்கு தத்துவமாய் - திருமாலுக்கு உடலாய் விளங்கும்
என்ற சரீர - சரீரிபாவம் வைணவ   சமயத்தின்   அடிப்படைக்
கொள்கையாகும். வேதாந்தம்,  சைவசித்தாந்தம்   போன்ற  பிற
தத்துவங்களும் இக்கருத்துடையனவே.   ஐயரவர்கள்   நூலகப்
பதிப்பில் விரிவு காணலாம். பிரமன் இராமனை நோக்கிக் கூறும்,
 

"பகுதிஎன்றுளது யாதினும் பழையது பயந்த
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு மேல்நின்ற
புகுதி யாவர்க்கும் அரிய அப்புருடனும் நீ இம்
மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம்"
 

என்ற பாடல் (10051) ஒப்பு நோக்கத்தக்கது.
 

(69)
 

6258.

' "எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை,-

 

முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர்-

வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்,

விழுத் தனிப் பல் இதழ் விரை இலா முகிழ்.
 

எழுத்து இயல் நாளத்தின்-  ஓவியத்தின்   தன்மைவாய்ந்த
அழகிய தண்டினையும்; விழுத்தனிப்பல் இதழ் - மேலான சிறந்த
பல இதழ்களையும்; விரை இலா   முகிழ் -  உடைய திருமாலின்
நாபியில் தோன்றிய மணம் கமழும் தாமரை மலரின்; முழுத்தனி