பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 183

6350.

"எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று

என்று,

நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி,

"அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினால்,

கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான்.
 

உலகு   அனைத்தும்    இப்பொழுதே    எஞ்சும் -
(நரசிங்கப்பிரானுடைய   சீற்றத்தால்   எல்லா    உலகங்களும்
இப்பொழுதே   அழிந்து  சிதையும்;   என்றென்று   நெஞ்சு
நடுங்கும்
நெடுந்தேவரை நோக்கி- என்றெண்ணி அச்சத்தால்
மனம்  நடுங்க  நின்ற  தேவர்களைப்  பார்த்து;  அஞ்சன்மின்
என்னா
- (நரசிங்கப்பிரான்) அஞ்சாதீர்கள்  என்றுகூறி;  அருள்
சுரந்த
நோக்கினால் - கருணை  நிறைந்து  பொங்கும் அருள்
நோக்குடனே; கஞ்ச மலர் பழிக்கும்கை- தாமரை  மலரையும்
பழிக்கும்படியான அழகிய  கையால்;  அபயம்  காட்டினான்-
அபயக் குறிப்பைக் காட்டியருளினான்.
 

எஞ்சுதல்  -   குறைதல்   (சிதைதல்).  " அருள்   சுரந்த
நோக்கினால் அஞ்சன்மின் என்னா - கை அபயம் காட்டினான்"
என  இயையும்.  கஞ்சம் -  தாமரை.  தாமரைமலரை  வென்று
நிற்கும் அழகிய கையை "கஞ்சமலர் பழிக்கும் கை" என்றார்.
 

(162)
 

திருமகள் வருதலும் சிங்கப்பிரான் நோக்குதலும
 

6351.

'பூவில் திருவை, அழகின் புனை கலத்தை,

யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை,

ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,

தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.
 

பூவில்  திருவை-  செந்தாமரை  மலரில்  வீற்றிருக்கும்
திருமகளை; அழகின்  புனைகலத்தை-   அழகு  (தனக்கு
மேலும் அழகு வேண்டி) அணியும் அணிகலன் போன்றவளை;
யாவர்க்கும் செல்வத்தை -  எல்லோருக்கும்  செல்வத்தை
வழங்கும்   செல்வியாகத்  திகழ்பவளை;   வீடு   என்னும்
இன்பத்தை 
-   பரமபதம்  என்ற   பேரின்ப   வீட்டைத்
தந்தருள்பவளை;    ஆவித்துணையை   -     திருமாலின்
உயிர்த்துணையாகப்   பிரியாது    இருப்பவளை;   அமுதில்
பிறந்தாளை
-  அமுதம்  பிறந்த  பாற்கடலில்   பிறந்தவளை;
தேவர்க்கும் தம் மோயை- தேவர்களுக் கெல்லாம் தாயாக
விளங்குபவளை; பாற் செல்லஏவினார் - (சீற்றம் கொண்டு
நின்ற